பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

சுந்தர சண்முகனார்


பின்னர் மூவரும் மரப்புணையில் ஏறி வையையைக் கடந்து அதன் தென்கரையை அடைந்து மதுரையை ஒரு சுற்றுச்சுற்றி மதுரையின் புறஞ்சேரியில் ஓரிடத்தில் தங்கினர்.

வழியில் இவர்களைக் கண்ட குவளை, ஆம்பல், தாமரை ஆகிய மலர்கள் இவர்கட்கு வரப்போகும் துன்பத்தை ஐயம் இல்லாமல் அறிந்தனபோல, வருத்தமான இசையுடன் ஏங்கிக் கண்ணிர் கொண்டு காலுற நடுங்கினவாம்.

"கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்க" (13:184-188)

என்பது இசையின் தன்மை என்பது பாடல் பகுதி. பண் நீர் என்பது இசையின் தன்மை. பச்சையாக எழுதவேண்டுமெனில், மலர்கட்காக வண்டுகள் கூலிக்கு மார்படித்துக் கொண்டு இரங்கல் இசை (சோககீதம்) பாடின என்று எழுதவேண்டும். மலர்கள் தங்களுக்காக இரங்கல் இசைக்கும் வண்டுகட்குக் கொடுக்கும் கூலி தேனாகும். மற்றும் மலர்கள் கண்ணிர் சிந்தினவாம். கண்ணிர் என்பதற்கு மற்றொரு பொருள் கள் நீர் - தேன் என்பதாம். மலர்கள் கால் உற நடுங்கின என்பது, காற்று (கால்) அடிப்பதால் ஆடி அசைந்தன என்னும் மற்றொரு பொருளைத் தரும் இதுவும் தற்குறிப் பேற்றமே.

மற்றும், மதில்களின் மேல் பறக்கும் நீண்ட துணிக்கொடிகள், இவர்களை நோக்கி நீங்கள் மதுரைக்கு வராதீர்கள் என்று கை நீட்டித் தடுப்பது போல் இவர்கள் பக்கம் நீட்டிக் கொண்டு பறக்கின்றனவாம்.