பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

357


"ஆராச் செருவில் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து

நிலைச் செருவினால் தலையறுத்து"
(பதிகம்-5; 18, 20)

என்பது பாடல் பகுதி. அடுத்து - மோகூரில் பழையன் என்னும் குறுநில மன்னனின் காவல் மரமாகிய வேம்பை வெட்டி அவனை வென்றானாம் சேரன்.

"பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு

வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்து"
(27: 124, 125)

என்பது பாடல் பகுதி. இத் பதிற்றுப்பத்திலும் கூறப்பட்டுள்ளது:

"பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி" (பதிகம்-5:13, 14)

இது பாடல் பகுதி. மற்றும், இடும்பில் வெற்றி, கடல் பிறக்கோட்டியது முதலியனவும் உரியன.

இன்னும் சில பெருமைகள் செங்குட்டுவனுக்கு உரியவை. அவை: தாய் விரும்பியபடி அவளைக் கங்கை நீராடச் செய்தது. பாண்டியனது நேர்மையான சாவைப் பாராட்டினமை.

வென்று சிறைபிடித்து வந்த கனக விசயர்க்கு மதிப்பளித்து, தனி மாளிகையில் தங்கச் செய்து வேண்டிய வசதிகளை அளித்தமை.

கனக விசயரைச் சிறைவீடு செய்தபோது, மற்ற குற்றவாளிகட்கும் விடுதலை தந்தமை. வரி நீக்கம் செய்தமை.

வடபுல மன்னர்கள் தென்புல மன்னர்களை இகழ்ந்ததைப் பொறுக்க முடியாத மானம் உடைமை.