பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சுந்தர சண்முகனார்


இந்திரனை மட்டும் வேந்தன் என்று கூறியது ஏன்? இந்திரன் என்னும் வட மொழிச் சொல்லுக்கு வேந்தன் (மன்னன்) தலைவன் என்று பொருள் கொள்வர். எடுத்துக் காட்டுகள்:- நரேந்திரன் = மக்கள் தலைவன். சுரேந்திரன் = தேவர் தலைவன். இராசேந்திரன் = மன்னர் மன்னன் - மன்னர்களின் தலைவன். கஜேந்திரன் = யானைகளின் தலைவன் - இன்ன பிற.

தேவர் உலகம் என ஒன்று இருப்பதாகவும், அங்கே தேவர்கள் எனப்படுபவர் பலர் இருப்பதாகவும், அவர்களின் தலைவன் இந்திரன் என்பதாகவும், அதனால் அவன் தேவேந்திரன் எனப்படுவதாகவும் கூறுவர். எனவேதான், தொல்காப்பியர் வேந்தன் என்று கூறியுள்ள மரபை ஒட்டி இளங்கோ மன்னவன் என்று கூறியுள்ளார்.

நாடு காண் காதை

மணிவண்ணன் கோட்டம்

மாதவியைப் பிரிந்து வந்த கோவலன் கண்ணகியுடன் வைகறை யாமத்தில் யாரும் அறியாமல் புகாரை விட்டுப் பிரிந்து செல்லலாயினர். அப்போது, வழியில் உள்ள, பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தனாகிய திருமாலின் கோயிலை வலஞ்செய்து சென்றார்களாம்

“அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணி வண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து”

(9, 10)

என்பது பாடல் பகுதி.

புத்த விகாரம்

போதி (அரச) மரத்தடிப் புத்த தேவனின் அருள் மொழியை வானத்தில் திரியும் சாரணர் வந்து ஓதுகின்ற -