பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

சுந்தர சண்முகனார்



5. பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இந்
நற்கொடி மென் முலைதான்

6. வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இக்
கொன்றையம் பூங்குழ லாள்

7. தூகிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இப்

பூவைப் புதுமல ராள்" .

என்பன பாடல் பகுதிகள். இவ்வாறு மாதரி தன் மகளிடம் கூறிப் பின் கன்னியர் எழுவர்க்கும், பழைய பெயர்கள் இருப்பதல்லாமல், தானாக ஒவ்வொரு புதுப் பெயர்கள் சூட்டினாள். அப் பெயர்கள்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பாடல் பகுதி:

"ஆங்கு,
தொழு விடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர்.இளங் கோதையார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்று படு முறையால் நிறுத்தி
இடை முது மகள் இவர்க்குப்
படைத்துக் கோப் பெயரிடுவாள்
குடமுதல் இடை முறையாக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என

விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே"

இது பாடல் பகுதி. படைத்துக் கோள் பெயரிடுதல் . தானாகப் புதிதாகப் படைத்துக் கொண்டு பெயர் வைத்தல்.

இக்காலத்தில் கூறும் ச, ரி, க, ம, ப, த, நி எனச் சுருக்கமாக வழங்கப்பெறும் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழுக்குப் பதிலாக, அக்காலத்தில் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் கூறப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்து.