பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

35


இந்திரனால் அமைக்கப்பட்ட புத்தப் பள்ளிகள் ஏழைப் போற்றிச் சென்றனராம் கோவலனும் கண்ணகியும்.

“பணைஐந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் கீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்

இந்திர விகாரம் ஏழுடன் போகி” (11-14)

என்பது பாடல் பகுதி.

அருகன் மேடை

சமண அடியார்களாகிய சாவகர்கள் அமைத்த அருகன் சிலாதலத்தைக் (கல்பிட மேடையைக்) கோவலனும் கண்ணகியும் சுற்றிவந்து வணங்கினராம்.

“உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதலம் தொழுது வலங்கொண்டு”

(24-25)

என்பது பாடல் பகுதி.

அருகன் பெயர்கள்

கோவலனும் கண்ணகியும் வழியில் கவுந்தி அடிகள் என்னும் சமணப் பெண் துறவியுடன் சேர்ந்து கொண்டனர். வழியில் சமணச் சாரணர்கள் சமணக் கடவுளாகிய அருகனைப் பின்வரும் பெயரால் குறிப்பிட்டுப் போற்றினர்.

“அறிவன் அறவோன் அறிவு வரம்பிகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சிவவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்

தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்