பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

387


அறிவுப் பொறிகள் (ஞானேந்திரியங்கள்), செயல்பொறிகள் (கன்மேந்திரியங்கள்), உள்ளுறுப்பு (அந்தக் கரணம்) ஆகியவற்றுள் ஒன்பது உறுப்புகளின் கடமையைத் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலில் கூறியுள்ளார்.

இளங்கோ அடிகள் செவி, கண், நாக்கு என்னும் மூன்றின் கடமைகளை மட்டும் கூறியுள்ளா ரெனில், இது அவராகக் (ஆசிரியர் கூற்றாகக்) கூறவில்லை. கதை மாந்தராகிய ஆய்ச்சியரின் சூழ்நிலைக்கு ஏற்ப, ஆய்ச்சியர் கூறியிருப்பதாக அளந்து கூறியுள்ளார். நாவுக்கரசர் தம் சொந்த உறுப்புகட்குக் கூறுவதால், கஞ்சத்தனம் இன்றி - தாராளமாகப் பல உறுப்புகட்கும் கட்டளை பிறப்பித்து உள்ளார்

ஆய்ச்சியர் குரவைப்பகுதியைப் பாடிப்பாடிச்சுவைத்து இன்புறல்வேண்டும்.

2. குன்றக் குரவை
சிறுகுடியிரே சிறுகுடியீரே!

தம் குன்றுப் பகுதியில் வேங்கை மரத்தின் கீழ் நின்று பின்பு வானுலகம் சென்ற கண்ணகியைக் கண்ட குன்றவர், இவள் போன்ற தெய்வம் நமக்கு வேறு இல்லையாதலின் இவளைப் பாடுவோம் என்று பாடிய பகுதி சுவையானதாதலின், விளக்கம் வேண்டாது அதனைக் காண்பாம்.

“சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கினர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை கன்னிழல் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்

கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்