பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

சுந்தர சண்முகனார்


4. நேரிழை நல்லாய் நகையாம் மலைநாடன்
மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன்;
தீர்க்க வரும்வேலன் தன்னினும் தான் மடவன்

கார்க் கடப்பந்தார். எம் கடவுள் வருமாயின்.’

இவை பாடல் பகுதிகள். தமிழ் அகப்பொருள் இலக்கணத்தை முற்றும் கரைத்துக் குடித்துக் கற்றவராகக் காணப்படுகிறார் ஆசிரியர் இளங்கோ.

மேலும் தலைவி கூறுகிறாள்:

1. நீலமயில் மேல் வள்ளியோடும் முருகன்வரின், மலை நாடராகிய என் காதலரோடு என்னை மணம் முடிக்க அருள்புரிக என்று வேண்டுவோம்.

2. மலைமகள் மகனாகிய முருகன் வரின், அவனையும் அவன் துணைவி குறமகள் வள்ளியையும் தொழுது, அயலாருக்கு என்னை மணமுடிக்கச் செய்யாமல், என் காதலருக்கே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம்.

3. மலைமகள் உமையின் மகனாகிய முருகன் வரின், அவனையும், அவன் மனைவியாகிய எம். குறக்குலத்து வள்ளியையும் தொழுது, பலரும் அறியும்படியாக என் காதலருடன் என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம்.

4. குறமகளும் எம் குலத்துமகளும் ஆகிய வள்ளியையும் முருகனையும். தொழுது, பிழைபட வேறொருவர்க்கு என்னை மணம் முடிக்காமல், என் காதலருடனேயே, என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம் - என்று தலைவி கூறி னாளாம். பாடல் பகுதிகள் வருமாறு:

1. ‘வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
லேப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன். புதல்வன் வரும்; வந்தால்

மால்வரை வெற்பன் மனஅணி வேண்டுதுமே.’