பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

391


2. ‘கயிலைகன் மலையிறை மகனை நின்மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல் மணம் ஒழி; அருள். அவர் மணம் எனவே.’

3. ‘மலைமகள் மகனை நின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்கின் இணையடி தொழுதேம்
பலர்அறி மணம் அவர் படுகுவர் எனவே.’

4.‘ குலமகள் அவள் எம குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவகின் அடியிணை தொழுதேம்
துறைமிசை கினதுஇரு திருவடி தொடுநர்

பெறுக கன் மணம்; விடு பிழை மணம் எனவே.’

என்பன பாடல் பகுதிகள்.

முருகனை ஈர்த்துக் கவர, அவன் மனைவி வள்ளி தங்கள் குறக்குலத்தவள் என்று கூறியிருக்கும் நயமான பகுதி சுவைக்கத்தக்கது. இவ்வாறாகக் குன்றக் குரவையில் பல சுவைகளை நுகர்ந்து மகிழலாம்.

ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, ஆகிய இரண்டிலும், பல பாடல்களில், இரண்டாம் அடி திரும்பவும் மூன்றாம் அடியாக மடங்கி வரும் செய்யுள் அமைப்பைக் காணலாம். ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வோர் எடுத்துக் காட்டு வருமாறு:

ஆய்ச்சியர் குரவை

‘முந்நீ ரினுள்புக்கு மூவாக் கடம் பெறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்

கன்னலில் தோளோச்சிக்கடல் கடைந்தான் என்பரால்.’