பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சுந்தர சண்முகனார்


“கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த

ஆதியின் தோற்றத்து அறிவனை வணங்கி” (3,4)

திருமாலின் திருவோலக்கம்

கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் உறையூரைக் கடந்து சென்று ஓர் இளமரக் காவில் தங்கியிருந்தபோது மாங்காடு என்னும் ஊர் மறையவன் ஒருவன் ஆங்கு வந்தான். அவனை நோக்கி, நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்றெல்லாம் கோவலன் வினவினான். மறையவன் பதில் இறுக்கிறான்:

என் ஊர் மாங்காடு - மறையவன் நான். காவிரி நடு அரங்கத்தில் அறிதுயில் கொள்ளும் அரங்கனை வணங்கினேன். மற்றும், திருவேங்கட மலையில், கருமுகில் மின்னலோடு வானவில் ஏந்தி இருந்தாற் போன்று, பொன்னாடையும் மணியாரமும் கொண்ட கரிய திருமால், இருபக்கக் கைகளிலும் ஆழியும் (சக்கரமும்) வெண் சங்கும் ஏந்தினால் போல், மாலையில் ஒரு பக்கல் ஞாயிறும் மறு பக்கல் வெண் திங்களும் விளங்க வீற்றிருந்த திருக் கோலத்தையும் கண்டு வணங்கி வந்தேன்-என்று கூறினான். பாடல்:

“விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலத் தானத்து
மின்னுக் கொடிஉடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் கின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி

நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு