பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

39


பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டுஎன்று என்உளம் கவற்ற

வந்தேன் குடமழை மாங்காட் டுள்ளேன்” (39-33)

என்பது பாடல் பகுதி. திருவேங்கடத்துத் திருமாலைப் பற்றி இளங்கோ அடிகள் கூறியுள்ள பகுதியை நோக்குங்கால், இன்னோ ரன்ன செய்தியைக் கொண்ட வேறு இலக்கியப் பகுதிகளும் நினைவிற்கு வருகின்றன. ‘இலக்கிய ஒப்புமை காண்டல்’ என்னும் முறையில் அவற்றையும் காண்போமே:

சாத்தனார் மணிமேகலை நூலில் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில் இப்படி ஒரு கற்பனை செய்துள்ளார்; புகார் என்னும் மங்கை, மாலையில் ஒரு பக்கல் வெண்தோடும் மற்றொரு பக்கல் பொன் தோடும் அணிந்திருந்தாற் போன்று, கீழ்பால் திங்களும் மேல்பால் ஞாயிறும் விளங்கின - என்று கூறியுள்ளார்.

“புலவரை இறந்த புகார் எனும் பூங்கொடி
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்

வெள்ளி வெண் தோட்டோடு பொன்தோடாக...”

என்பது பாடல் பகுதி. பரிபாடல் என்னும் நூலிலும் திருமாலைப் பற்றி இப்படி ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. திருமாலின் ஒரு கையில் ஞாயிறு மண்டிலம் போல் ஆழியும் (சக்கரமும்), மற்றொரு கையில் வெண் திங்கள் மண்டிலம் போல் வெண் சங்கும் உள்ளனவாம்.

“பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத் திலக்கம்போல

நேமியும் வளையும் ஏந்திய கையால்...” (13-7-9)

என்பது பாடல் பகுதி. திருவரங்கத்திலும் திருவேங்கடத்திலும் திருமாலைக் கண்டு வணங்கவேண்டுமென மாங்காட்டு