பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சுந்தர சண்முகனார்


கனாத் திறம் உரைத்த காதை

கண்ணகி முன் பிறவியில் தன் கணவன் தொடர்பான ஒரு நோன்பு இயற்றுவதில் பிழை செய்து விட்டதாகத் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழி கண்ணகியிடம் கூறினாளாம். பாடல்:

“கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு

பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க் கெடுக...” (55,56)

மற்றும், பழைய ஊழ்வினை கூட்டியதால், ஞாயிறு தோன்றுவதற்கு முன்பே, வைகறையில் கோவலன் கண்ணகியுடன் புகாரை விட்டுப் போக எண்ணினான்.

மூதை, வினை கடைக்கூட்ட வியங்கொண்டான் கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்

என்பது, இறுதி வெண்பாவின் இறுதிப் பகுதி.

நாடு காண் காதை

கோவலனும் கண்ணகியும் ஊழ்வினை செலுத்தியதால் மதுரை நோக்கிப் புறப்பட்டனராம்.

“ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப” (4)

என்பது பாடல் பகுதி.

கோவலனும் கண்ணகியும் வழியில் ஒரு சோலையில் தங்கியிருக்கையில், ஒரு சாரணர் வந்து தோன்றினர். கோவலனும் கண்ணகியும் கவுந்தியுடன் சேர்ந்து, எங்கள் பழைய வினை கெட்டொழிக என வேண்டிச் சாரணரைத் தொழுதனராம்:

“தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்
பண்டைத் தொல்வினை பாறுக என்றே

கண்டறி கவுந்தியொடு காலுற வீழ்ந்தோர்” (163-165)

என்பது பாடல் பகுதி.