பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சுந்தர சண்முகனார்


“நண்ணும் இருவினையும் கண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகிதன் கேள்வன் காரணத்தால் மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை

விளைவாகி வந்த வினை”

பாண்டியனுக்குப் பழைய தீய ஊழ்வினை இருந்ததால் கோவலன் காரணமாகச் செங்கோல் வளைந்தது. எனவே, உலகமக்களே! நல்வினை-தீவினை என்னும் இருவினையும் நம்மை வந்து சேரும்; ஆதலின் எப்போதுமே நல்ல அறச் செயல்களையே செய்யுங்கள்-என்று உலகுக்கு ஆசிரியர் கூறும் அறிவுரையாக இப்பாடல் அமைந்துள்ளது.

கட்டுரை காதை

மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி கண்ணகியை நோக்கி, பழைய ஊழ்வினை வந்து பயன் அளிக்கத் தொடங்கிவிடின், ஒழுங்கற்றவர்கள் எவ்வளவு தவம் இப்போது செய்யினும் ஊழைவெல்ல முடியாது.

“உம்மை வினைவந்து உருத்த காலைச்

செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது” (171, 172)

குன்றக் குரவை

மதுரையும் பாண்டியனும் அழிந்தபின், கண்ணகி நெடுவேள் குன்றம் அடைந்தாள். குன்றத்து மக்கள் கண்ணகியை நோக்கி யாரென்று வினவக் கண்ணகி கூறினாள்: பழைய தீய வலிய ஊழ் வினை வந்து உருத்த தால், மதுரையும் பாண்டியனும் அழிய, கணவனை இழந்த கொடு வினையேன் யான் என்று கூறினாள்:

“மணமதுரையோடு அரசு கேடுற
      வல்வினை வந்து உருத்தகாலைக்
கணவனை அங்கு இழந்து போந்த

     கடுவினையேன் யான் என்றாள்” (5, 6)