சிலம்போ சிலம்பு !
61
நீர்ப் படைக் காதை
கனக விசயர் தலையில் கல்லேற்றி வந்த மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் மறையவன் மாடலன் கோவலன் வரலாறு கூறினான்: புகார்க் கடற்கரையிலே, பழைய தீய ஊழ்வினை வந்து உருத்ததால், மாதவி பாடிய வரிப் பாடலில் மாற்றுப் பொருள் கண்ட கோவலன் அவளை விட்டுப் பிரிந்து கண்ணகியிடம் வந்து சேர்ந்தான் என்று கூறினான். பாடல்:
“மாதவி மடங்தை வரிகவில் பாணியொடு
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்தெழக்
கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன்
நடுகல் காதை
செங்குட்டுவனிடம் அறவேள்வி செய்யுமாறு மாடலன் தூண்டிய போது, பின் வரும் கருத்தைக் கூறினான். முன் செய்த ஊழ் வினையின் வழிப்படி உயிர் இயங்கும் என்பது மெய்யாளர் மொழிந்த மேலான கருத்தாகும் - என்றான்.
பாடல்:
“செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது
ஈண்டு இது, புறநானூற்றில் உள்ள
“நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
என்னும் பாடல் பகுதியோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.
வரம் தரு காதை
மாலதி என்பாள் மாற்றாள் குழந்தைக்குப் பால் சுரந்து ஊட்டினாளாம். பழைய தீய ஊழ் வினை உருத்த-