பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

சுந்தர் சண்முகனார்


2. அடைக்கலக் காதை

கோவலன் மதுரை நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுப் புறஞ்சேரியில் தங்கியிருந்தபோது, ஆங்கு வந்து பழகிய மாடலன் என்னும் மறையவனிடம் கோவலன் தான் கண்ட கனவைக் கூறுகிறான்.

யான், ஒரு குறுமகனால், வேந்தன் நகரில், கண்ணகி நடுங்கு துயர் எய்த, கூறை (உடை) கொள்ளப்பட்டுப் பன்றிமேல் ஊர்ந்ததாகவும், மற்றும் யான் கண்ணகியோடு துறவியர் பெற்றி எய்தியதாகவும், காமன் செயலற்று ஏங்க மணிமேகலையை மாதவி அறவோன்முன் அளித்ததாகவும் நனவுபோலக் கனவு கண்டேன் - என்று கோவலன் விவரித்தான்.

இந்தக் கனவும், மதுரையில் கோவலனுக்கு நடக்க இருக்கும் கொடுமையையும், அதன்பின் அவனும் கண்ணகியும் மேலுலகம் செல்ல இருப்பதையும், மகள் மணிமேகலை துறவு கொள்ளப் போவதையும் முன்கூட்டி அறிவிப்பதாகும். பாடல்:

“கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
காறைங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்
கனவு போல நள்ளிருள் யாமத்துக்

கனவு கண்டேன் கடிது ஈங்குறும்..” (95-106)