சிலம்போ சிலம்பு!
77
உன்னமரம் தழைத்தால் நல்ல சகுனமாம்; சாய்ந்தால் தீய சகுனமாம். சாய்ந்தாலும் மன்னன் அஞ்சவில்லையாம்.
“பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப்
புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ”
பொன் போன்ற பூவையும் சிறிய இலையையும் உடைய உன்னமரம் தீய சகுனம் காட்டினும், பகைபோல் அதற்கு எதிராகப் போர்மேல் மன்னன் செல்வானாம்.
“துன்னரும் சிறப்பின் தொடுகழல் மன்னனை
உன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று’ (கொளு)
“துன்னருங் தானைத் தொடுகழலான் துப்பெதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண்முருங்க - மன்னரும்
ஈடெலாம் தாங்கி இகலவிந்தார் நீயும்நின்
கோடெலாம் உன்னம் குழை”
உன்ன மரமே பகைவர் அழிந்தனர்; நம் மன்னன் வென்று விட்டான்; எனவே, நீ இன்னும் நன்றாகத் தழைக்கலாம் — என்று கூறுவதாக உள்ளது இப்பாடல். உன்ன மரம் சகுனத்திற்கு உரிய பொருளாயிருப்பதால் சகுனம் என்னும் பொருளில் உன்னம் வழங்கப்படுவதுண்டு.
காரி (கரிக் குருவி) கத்திலும் தீய நிமித்தமாம். பகைவரின் இடத்தில் காரி கத்தியதாம். அதனால் தம் மன்னனுக்கு வெற்றி கிடைக்கும் என்னும் பொருளில் புறப்பொருள் வெண்பா மாலையில் ஒரு பாடல் உள்ளது.
“வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
என்பது பாடல் பகுதி. சீவகசிந்தாமணி முதலிய நூல்களிலும் இக்கருத்து உள்ளது. பழைய பறவைகள் போகப்-