இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82
சுந்தர சண்முகனார்
குடத்தில் உள்ள பால் புரை குத்தியும் தயிராகத் தோயவில்லை. எருதின் கண்களிலிருந்து நீர் சொரிந்தது. காய்ச்சினால் வெண்ணெய் உருக வில்லை. ஆட்டுக் குட்டிகள் துள்ளி ஓடியாடி விளையாடவில்லை. ஆனிரைகள் நடுங்கி அழுவதுபோல் அரற்றின. அவற்றின் கழுத்து மணிகள் அறுந்து கீழே விழுந்தன. பாடல்: உரைப்பாட்டு மடை
1. குடப்பால் உறையா; குவியிமில் ஏற்றின்
மடக்கண் நீர்சோரும்; வருவதொன் றுண்டு.
2. உறிநறு வெண்ணெய் உருகா உருகும்