92
சுந்தர சண்முகனார்
என மாறுபட்ட இரண்டிரண்டாக வரும் அகக்கூத்து இலக்கணமும் புற நாடகமும் அறிந்திருத்தல்.
2. பாட்டு உறுப்பு பதினான்குடன் ஆடலைப் பொருத்தல்.
3. அல்லியம் முதலிய பதினொரு கூத்து வகை அறிதல்.
4. அக நாடகங்கட்கு உரிய இருப்பத்தெட்டு உருக்களை அறிதல்.
5. புறநாடக உறுப்பாகிய தேவபாணி முதலியன அறிதல்.
6. கூத்து விகற்பங்கட்கு உரிய வாச்சியக் கூறுகளை அறிந்திருத்தல்.
7. பாடல், தாளம், தூக்கு ஆகியவற்றிற்கு ஏற்ப, அகக் கூத்தும் புறக்கூத்தும் நிகழ்த்து மிடத்து, ஒற்றைக் கையும் இரட்டைக் கையும் காட்டும் நுட்பம் அறிதல்.
8. அகக்கூத்தில், ஒற்றைக் கைத்தொழில் இரட்டையில் புகாமலும், இரட்டைக் கைத்தொழில் ஒற்றையில் புகாமலும் விலக்கல்.
9. புறக்கூத்தில் ஆடல் நிகழும்போது அவிநயம் நிகழாமலும் அவிநயம் நிகழுங்கால் ஆடல் நிகழாமலும் விலக்கல்.
10. குரவைக் கூத்துக்கு உரிய கால்களும் வரிக் கூத்துக்கு உரிய கால்களும் விரவாமல் காத்தல். முதலியவை ஆடல் ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய இயல்புகளாம்.
3. இசையாசிரியன் இயல்பு
1. யாழிசையும் குழலிசையும் வண்ணக் கூறுபாடுகளும் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் தண்ணுமை நிலையும் பதினோராடல் கூத்துகளும் அறிந்திருத்தலோடு அவற்றில் வல்லமையும் பெற்றிருத்தல் வேண்டும்.