உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மூலமும் - உரையும


இதுவும் அது.
கொச்சகம்.

பூவாழி மறைவாழி புகல்செம்பொற் சிலைவாழி
பாவாழி சுடர்வாழி பகர்சம்பு முனிவாழி
மாவாழி யகளங்க வனியர்பெருந் தமர்வாழி
கோவாழி யிவர்தனிச்செங் கோல்வாழி வாழியவே. (71)

(இ - ள்.) பூவாழி - பூமிவாழக்கடவது; மறைவாழி - வேதங்கள் வாழக்கடவன; புகல்செம்பொன் சிலைவாழி - சொல்லுகின்ற மிக்க அழகினையுடைய சிலையெழுபதென்னும் இப்பிரபந்தம் வாழக்கடவது; பாவாழி - இதன் உள்ளுறுப்பாகிய கவிகளும் வாழக்கடவன; சுடர்வாழி - (அக்கினி சூரியன் சந்திரன் என்னும்) மூன்று சுடர்களும் வாழக்கடவன; பகர் சம்பு முனிவாழி - யாவரும் புகழுகின்ற சம்பு இருடியானவர் வாழக்கடவர்; மாவாழி - இலக்ஷூமி வாழக்கடவள்; அகளங்க வனியர் பெருந்தமர்வாழி - களங்கமில்லாத குணத்தினையுடைய வன்னியர்களது பெரியசுற்றத்தவர்கள் வாழக்கடவர்கள்; கோ வாழி-இவர்களது அரசு வாழக்கடவது; தனிச்செங்கோல் வாழி வாழிய - ஒப்பற்ற செங்கோல் வாழக்கடவது வாழக்கடவது. எ-று.

சுபம்! சுபம்!!

சிலை எழுபது மூலமும் உரையும்

முற்றிற்று.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/134&oldid=1863022" இலிருந்து மீள்விக்கப்பட்டது