பக்கம்:சிவஞானம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சி வ ளு ா ன ம்

இவ்விதம் நான் பத்தடி தூரமேனும் நடந்திருக்கமாட் டேன் ; அப்போது நம் எசமானனுக்குப் பகை வயை அக்கூலியாளன் வேருெரு வண்டியை ஒட்டிக் கொண்டு அவ்வழியே வந்தான்; அவன் என்காயத்தையும், வண்டியில் மனிதர்கள் அதிகப் பட்டிருத்தலையும் கண்டுவிட்டான். உடனே அச் கூலியாளன் தன் வண்டியை அதிவேகமாக எங்கோ ஒட்டிச்சென்ருன்-என் கண்ணே, என்

நல்லகாலம் போலும் ! அவன் சிறிது நேரத்திற் கெல்லாம் பைரி ' என்னும் பெயர் பூண்ட அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவரைத் தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு மிக்க வேகமாய் என் அருகே ஒட்டிவந்து அவரை இறக்கினன். அந்த அதிகாரி, என்காயத்தையும் வண்டியில் அதிக மனிதர் ஏறியிருத்தலையும் கண்டு, மிக்க கோபத் துடன் விரைந்து வந்து நம் எசமானன் என்னை ஒட்டிச் செல்லாத வண்ணம் என் வார்ப் பட்டையை இறுகப் பிடித்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/55&oldid=563087" இலிருந்து மீள்விக்கப்பட்டது