52 சிவ ஞா ன ம்
ஒடியதால் ஒருவரும் அவனைப் பிடிக்க முன் வர வில்லை. அப்பாதகன் அதிவேகமாய்ச் சென்று எங்கேயோ மறைந்து விட்டான். கூலியாளன் அறிவிழந்து நிலத்தில் விழுந்து கிடந் தான். இரத்தம் ஆருகப் பெருகிக்கொண் டிருந்தது. இதற்குள் போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்தே வந்து சூழ்ந்து கொண்டனர் அவர்கள் அங்கு நடந்ததைக் குறித்து அங்குள் ளோரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். நான் மெதுவாய் அவ்வண்டியை இழுத்துக் கொண்( வீடு வந்து சேர்ந்தேன். நான் அவ்வாறு செல்லு தலை ஒருவரும் கவனிக்கவில்லை. ஏனெனில், அ. குள்ளோர்கள் தரையில் கிடந்த அந்தக் கூன் யாளனிடமே சூழ்ந்து கொண்டிருந்தனர். நான் தனியே வருதலைக்கண்ட நம் எசமானன் மனைவி ஒன்றும் தெரியாது திகைக்கலாயினுள். அதற்குள் அங்கே சிலர் ஓடிவந்து, நடந்த வரலாற்றை யெல்லாம் கூறிப் பின்னர், அக்கூலியாளன் இறந்து விட்டான் என்றும் இயம்பினர். இதை கேட்டதும் நம் எசமானன் மனைவி தன் கண னுக்கு யாது தீங்கு நேருமோ எனப் பதைபதை தனள் ; தன் கணவன் எங்குச் சென்றிருப்பா என்று ஆலோசிக்கத் தொடங்கிள்ை. அத்தருண தில் சில போலீஸ் உத்தியோகஸ்தர்கள் அங்ே வந்து வீட்டிற்குள் நுழைந்து நம் எசமானனை தேட ஆரம்பித்தனர். அங்கு அவன் அகப்படாை யால் அவன் மனைவியினிடம் அவர்கள் ஏதே.ே வாக்கு மூலங்கள் வாங்கினர்.