பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை நெட்டால் தமிழ் வைதீக சபையின் சார்பில் சிவன் அருள் திரட்டு என்ற உயர்ந்த நூல் இரண்டாவது பதிப்பு வெளியிடப் படுகிறது. நால்வர் பாடல்களும், திருப்புகழ், திருவருட்பா ஆகியவற் றிலிருந்து எடுக்கப்பெற்ற சில பாடல்களும் ஆங்கில ஆக்கம், தமிழ் உரை, ஆங்கில உரை, சொல் தொகுதி ஆகியவற்றுடன் இந்நூலில் வெளியிடப்பெற்றுள்ளன. இது சிறப்பான முழுமையான முயற்சி யாகும். நம்மவரில் பெரியவர்கள் மட்டுமே பொருளுணர்ந்து பாடி வந்த இப்பாடல்களை வளர்கின்ற நம் இளைய தலைமுறையினரும் நன்கு பொருள் அறிந்து பாட இந்நூல் மிகவும் உறுதுணையாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நூலை மாணவர்கள் கற்பதன் மூலம் இறையுணர்வு பெறுகிருர்கள். அதே நேரத்தில் அவர்கள் தமிழ்ப்பயிற்சி பெறுவதற்கும் இது உதவி செய்கிறது. நம்மவர்கள் தம் பிள்ளைகட்கு தமிழ் மொழி அறிவை வளர்க்க இந்த நூலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அவர்கட்கு இறை யுணர்ச்சியுடன், தமிழ் அறிவையும் மற்றவரினும் மேலாக வளர்க்க வேண்டுகிறேன். இந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்குப் பல்லாற் முனும் உதவி புரிந்த இராமலிங்கர் பணி மன்றத் தலைவர், டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களுக்கும், ஏனைய தமிழ் நாட்டு அறிஞர்கட்கும் உரை விளக்கம் அளித்த சிவநெறிச்செல்வர் திரு கே. எம். வேங்கடராமையா எம். ஏ. அவர்கட்கும் இந்நூல் சிறப் பான முறையில் வெளிவர முன்னின்று வெளியிட்ட திரு. என். சி. நாயுடு அவர்கட்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சி. ஜி. செட்டி தலைவர் நெட்டால் தமிழ் வைதீக சபை மே 1984