பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429 வேண்டும். ஒருவன் தன் தாயிடம் அன்பு காட்டுவான்: தந்தை யிடம் அன்பு காட்டுவான்; தன் உடன் பிறந்தாரிடம் அன்பு காட்டுவான்; திருமணம் ஆனவுடன் மனைவியிடம் அன்பு காட்டு வான்: உற்ருர் உறவினரிடம் அன்பு காட்டுவான். தன் குழந்தை களிடம் அன்பு காட்டுவான். இவற்றுக்கு மேலாக இன்ைெரு வரிடம் அன்பு காட்டவேண்டும்; அதுவே உயிர் உய்வதற்கு உரிய வழியாகும். இறைவனிடம் காட்டும் அன்பே அது. இறைவனிடம் அன்பு காட்டினல் எல்லாரிடமும் அன்புடையவராவோம்: அன்பே சிவம் என்பதை அறிவோம். அன்பெனும் பிடியுள் அகப்படும் மலேயே Anbenum pidiyull agappadum malaiye அன்பெனும் குடில்புகும் அரசே Anbenum kudilpugum arasē அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே Anbenum valaikkull paduparam porullē அன்பெனும் கரத்தமர் அமுதே Anbenum karaththamar amudhē அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே Anbenum kadaththul adanggidum kadalē அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே Anbenum uyir ollir arrivè அன்பெனும் அணுவுள் அமைந்த பேர் ஒளியே Anbenum annuvull amaindha pēr olliyē அன்புரு வாம் பர சிவமே. Anburu valam para sivamē அன்பு என்ற கைப்பிடியில் பிடிக்கக்கூடிய மலையே! அன்பு என்ற வீட்டில் புகுந்து இருக்கும் அரசனே! அன்பு என்ற வலையில் அகப்படக்கூடிய கடவுளே! அன்பு என்ற கையில் தங்கி இருக்கும் அமிர்தமே! அன்பு என்ற பானையில் அடங்கியிருக்கும் கடலே! அன்பு என்ற உயிரில் ஒளி தருகிற அறிவே! அன்பு என்ற அணுவில் பொருந்தி இருக்கும் பெரிய ஒளியே அன்பு உருவம் ஆகிய சிவபெருமானே. -swearly-love цougl-griр 10&u-mountain Gią sw-abode