பக்கம்:சிவ வழிபாடு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Varied wealth and famous life do but stop at the residence. The wife with her eyes filled with tears will proceed only up to the street. Sobbing and placing both hands on the head, the sons weep but they go only up to the burning ghat. But the two deeds-good and evil and their results (punyam and papam) alone follow. (59) எல்லா நற்பண்புகளும் படைத்தவராக இருப்பது அரிதினும் அரிது. அதற்காகத்தான் சிறுசிறு நற்செயல்களையேனும் செய்யுமாறு ஆன்றோர் நம்மைத் துாண்டுகின்றனர். அறம் செய விரும்பு என்பர். ஈவது விலக்கேல் என்பர் இயல்வது கரவேல் என்பர் ஐயம் இட்டு உண் என்பர் கொடுத்துப் பழகுவதற்கு இத்தனை கூறியவரே ஏற்பது இகழ்ச்சி என்றார். ஆகையால் ஈவது நல்லது ஏற்பது இகழ்ச்சி என்றதன் கருத்தை அறிய வேண்டும். கொடுத்துக்கொண்டே இருந்தால், சோம்பித் திரிந்து ஏற்பவர் கூட்டம் பெருகும். ஆகவே 'கொடு' என்றவரே ஏற்காதே என்றார். எனவே சோம்பித் திரியாது, முயற்சியால்-உடல் உழைப்பால் பொருளிட்டி வாழ்வதே நற்செய்கை என உணர்ந்து செயல்படுவதே சாலச் சிறந்தது. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்துபெற்று Aiyiranndu thinggallaay anggamellaam nondhupetru பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு Paiyalendra põdhē parindheduththuch seyya iru கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாள்ை Kaippurraththil enthik kanagamulai thanthaallai எப்பிறப்பில் காண்பேன் இனி. Eppirrappil kaannpēn ini. பத்துமாதம் சுமந்தாள் உடம்பெலாம் நொந்தது. குழந்தை பிறந்தது; ஆண் குழந்தை என்றனர். அப்படிச் சொன்னதும் அன்போடு எடுத்துக் கொண்டாள். இரண்டு கைகளையும் குழந்தை முதுகில் சேர்த்து ஏந்தினாள் குழந்தைக்குப் பால் கொடுத்தாள் இத்தகைய தாயை இழந்தேன்) (அவளை) இனி எந்தப் பிறவியில் காண்பேன்? 118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/127&oldid=833373" இலிருந்து மீள்விக்கப்பட்டது