பக்கம்:சீனத்தின் குரல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சீனத்தின் குரல்


விட்ட ஒருவன் என்றாவது ஒருநாள் அவனாலும் பொறுக்க முடியாத அலவுக்கு பலத்த அடி வாங்குகின்றபோது, மூர்க்கனாய், முரடனாய், காட்டுமிராண்டியாய் மாறிவிடுவதைப்போல, சீன மக்கள் அடி வாங்கி வாங்கி தழும்புகள் ஏறி பழகிப் போயிருந்ததால், ஏழெட்டு வல்லரசுகளின் அடி ஒன்றாகச் சேர்ந்து விழும்போது தாங்க முடியாமல் கொக்கரித்து போர்க்கோலம் கொண்டு மரண தைரியத்தோடு மாற்றாரை புறங்காணப் புறப்பட்டு விட்டார்கள். பலமான எதிர்ப்பு முகாம் அமைக்கப்பட்டுவிட்டது. சீனயந்திரம் பல நாட்களாகக் கெட்டுக் துருப்பிடித்துக் கொண்டிருப்பதற்குக் காரணத்தைக் கண்டு, அந்த காரணந்தான். மஞ்சு அரசாங்கம் என்று முன்பு சந்தேகப்பட்டதை இப்போது ஊர்ஜிதப்படுத்தி விட்டார்கள். அயல் நாட்டார், கொண்டு வந்த துப்பாக்கிகளும், குண்டுகளும் இவர் களுக்கு வீரத்தை பூட்டியிருந்தாலும் சரியாக செப்பனிடப்பட்ட அரசியல் பொருளாதார சமூக அமைப்புகளை இவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அதோடு விஞ்ஞான அறிவு பெறவேண்டும். இதற்கென்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார் சன்-யாட்-சன்.

நால்வர்

இந்த நால்வரையும் சீன நாட்டின் எல்லைக்கோடுகள் என்றழைத்தால் மிகையாது. நால்வரும் நான்கு களங்கரை விளக்கமென விளங்கினார்கள். சீன மக்கள் தேடிப் பிடிக்க வேண்டிய கஷ்டமில்லா