பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 87


இளவரசி வெள்ளைச்சியின் பிரதிநிதியாக ராணி வேலுநாச்சியார் ஆட்சியாளராக அமைந்து இருந்த பொழுதிலும், சீமையின் நிர்வாக இயக்கத்திற்கு பிரதானிகள் உதவி வந்தனர். இளவரசி வெள்ளைச்சி திருமணம் ஆகாத கன்னிகையாகவும், ராணி வேலு நாச்சியார் கணவரை இழந்த கைம்பெண்ணாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் இருவரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துப் பணிகளிலும் நேரடியாக ஈடுபட இயலாத நிலை. அத்துடன் அன்றைய சமுதாய அமைப்பில், இத்தகைய உயர்குலப் பெண்கள். தங்களது தனிமை நிலையைத் தவிர்த்து பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவது விரும்பத் தகாததாகவும் இருந்தது. பெண் உரிமை என்ற விழிப்புணர்வுடன் பாரம்பரியமாக வந்த மரபுகள் மீறுவதையும் ஏற்று சகித்துக் கொள்ளாத சமூக நிலை. இத்தகைய இறுக்கமான அகச்சூழலில் அரசியலை பிரதானிகள் மூலமாக அரசியார் சிறப்பாக நடத்தி வந்து இருப்பது அருமையிலும் அருமை.

இயல்பான சிந்தனைகளுக்கு எதிரான புரட்சிகரமான செயல்பாடுகளையும் போக்கினையும் சின்னமருது சேர்வைக்காரர் கொண்டிருந்தார். மக்களது பாராட்டுதலுக்கு உரிய செயல்பாடுகள் அனைத்தையுமே, ராணிவேலுநாச்சியார் ஒப்புதல் வழங்க வேண்டுமென அவர் எதிர்பார்த்தார். குறிப்பாக பக்கத்து நாடுகளான புதுக்கோட்டை தொண்டமான், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆகியோரது அரசியல் தொடர்பை பாதிக்கும் எல்லை தகராறுகளை ராணியார் விரும்பவில்லை. சின்ன மருது சேர்வைக்காரரோ அவைகளை மானப் பிரச்சனையாக மனதில் கொண்டு, நான்கு வகையான உபாயங்களில் இறுதியான தண்டத்தை பயன்படுத்த முயன்றார். இந்த கொள்கை வேறுபாடுகளினால் நிர்வாக இயக்கத்தில் ராணியாருக்கும் பிரதானிக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

விரைவில் அது வளர்ந்து ஒன்றுபட்டு பரம்பரை ராஜ விசுவாசம், பகட்டான செயல் திறன் இவைகளை பற்றி நிற்கும் மக்கள் அனைவருக்கும், ராணியாரது விசுவாசமும், பிரதானிகள் சேவையும் வேண்டும். ஆனால் மக்களது மன நிலை மாற்றம் பெறாமல் இருந்தால் தானே! நாளடைவில் அவர்கள் இரு பகுதிகளாகப் பிரிந்து, ஒரு பிரிவினர் ராணியாரையும் இன்னொரு பிரிவினர் பிரதானியாரையும் சார்ந்து இருந்தனர். இத்தகைய நிலையில் தான், மருது சகோதரர்களை மட்டும் குறுகிய வட்டத்தில் நின்று போற்றுகின்ற பிரிவினர், கற்பனைச் சரடு ஒன்றினைத் திரித்து உலாவ விட்டனர். விதவை ராணி வேலு நாச்சியாரும், பிரதானி பெரிய மருதுவும் திருமணம் செய்து கொண்டனர் என்பது. ராணி வேலு நாச்சியாரின் திருமணம் மூலம் சிவகங்கை சீமை மருது சேர்வைக்காரர்களது சொந்த சொத்தாகி விட்டது என்பதுபோல, தெரிவித்துக்கொள்ள இந்த கற்பனை புனையப்பட்டது. அத்துடன்