பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


“அன்புள்ள நண்பரே!

சிவகங்கைச் சீமையில் வசூல் பணியில் ஈடுபட்டுள்ள மீர்குத்புதீன்கான் மற்றும் இதர ஊழியர்களிடமிருந்து எனக்கு தகவல் வந்துள்ளது. சின்ன மருது சுமார் பத்து முதல் பன்னீராயிரம் பேர்களுடன் சிவகங்கைக் கோட்டையைச் சூழ்ந்து இருக்கிறான். அங்கு பொறுப்பில் உள்ள குத்புதீன்கானைக் கொன்று கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் இந்தத் தகவல் வெளியில் செல்லாமல் தடுப்பதற்கு, சிவகங்கையில் இருந்து செல்லும் வழிகள் அனைத்தையும் மூடியுள்ளான். இந்த வழிகளில் செல்லும் சர்க்காரது அஞ்சல் சேவகர்களைக் கூட காயப்படுத்தி கொன்று போடும் நிலையில் இருக்கிறான்.

“மதுரை, இராமநாதபுரம், தொண்டமான் சீமைகளில் சில கிராமங்களைச் சூறையாடி, அங்கெல்லாம் அமைதியையும் இயல்பான வாழ்க்கையையும் சீரழித்துள்ளனர். கிளர்ச்சிகளைச் செய்து வருகின்றனர். இவரும், இவரது தமையன் பெரிய மருதுவும் முந்தைய சிவகங்கை மன்னரிடம் எடுபிடியாக, மன்னர் வேட்டைக்குச் செல்லும்பொழுது வேட்டை நாய்பிடித்துச் செல்பவர்களாக இருந்தவர்கள். பிறகு தனது எஜமானது சொத்துக்களைக் கொள்ளையிட்டதுடன், அந்தச் சீமையை நாம் கைப்பற்றிய பொழுது வத்தலக்குண்டுவிற்கு ஓட்டம் பிடித்தனர். நடந்து முடிந்த போரின் பொழுது மைசூரின் சுல்தான் ஹைதர் அலியுடன் திரும்பி வந்து, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, சிவகங்கைச் சீமைகளைக் கொள்ளையிடுவதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

மதுரைக் கோட்டையைத் தாக்கி ஜமேதார்கள் முத்துராவையும் புஜங்கராவையும் கொன்றதுடன் இராமநாதபுரம் கோட்டையையும் தாக்கினர். கவர்னர் மக்கார்டினி நிர்வாகத்தின் பொழுது மிகவும் இழிவான முறையில் சிவகங்கைச் சீமை பேஷ்குஷ் தொகையினைத் தங்களது சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்தினர். அடிக்கடி இந்த பாக்கித் தொகையைச் செலுத்தும்படி கேட்டும் அதனை செலுத்த மறுத்து வந்ததுடன் அந்த தொகையினைக் கொண்டு தங்களது நிலையினை உயர்த்திக் கொண்டு எனது கட்டளைகளையும் புறக்கணித்துவிட்டனர்.

இப்பொழுது, இராமநாதபுரம் சீமையில் பல ஊர்களைக் கொள்ளையிட்டுள்ளனர். குடிமக்களில் ஒருவரைக் கொன்று பலரைக் காயப்படுத்தி இருக்கின்றனர். இந்த அதீதமான கொடுமையினால் அந்தச் சீமை முழுவதும் கிளர்ச்சி பரவியுள்ளது. தடுக்க இயலாத இந்த கொடுமைகளை சகித்துக் கொள்ள இயலாத நிலையில் மக்கள்