பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கள் மையத்தின் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றி வைப்பது யார்? இதை தீர்மானிப்பதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. அத்தகைய எண்ணம் எழுந்ததும் எங்கள் நினைவிற்கு வந்தவர் டாக்டர் எஸ்.எம்.கமால். இந்த மாவட்டம் பிரிக்கப்படாமல் இராமநாதபுரமாக இருந்தபோது அதன் தொடர்புடைய வரலாற்று நூல்களை எழுதி அரசாலும் ஆய்வாளர்களாலும் பாராட்டப்பட்டவர்.

உடல் நலிவுற்ற நிலையிலும், உளச் சோர்வின்றி இந்த அருமையான நூலை எழுதி முடித்த அவருக்கு தமிழ் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது என்றால், மிகையாகாது.

இந்தப் பணியில் எங்கள் மையம் இறங்க உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ஆதரவு நல்கிய கல்விக்காவலர் சண்முக மாமன்னர் ஈன்றெடுத்த பொற்புடை பெருமாட்டி மேதகு சிவகங்கை ராணி ராஜலக்ஷ்மி நாச்சியார் அவர்களுக்கு எங்கள் ஆய்வு மையத்தின் சார்பில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

சிவகங்கையில் உள்ள மகாத்மா காந்தி நினைவுப் பூங்கா அறக்கட்டளையினர் இந்த நல்ல பணியில் தங்கள் பங்கு சிறக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம்) கொடுத்து உதவிய பெருந்தகைமைக்கு அதன் அறங்காவலர்களான,

மேதகு ராணி ராஜலக்ஷ்மி நாச்சியார் (தலைவர்)

மேதகு ரகுராஜ துரை (பொருளாளர்)

திரு ஏ.மா.சுதர்சன நாச்சியப்பன் (துணைத்தலைவர்)

தியாகி திரு அரு.சதாசிவம் (செயலர்)

தியாகி திரு. கே.இராமசாமி

திரு ஜனாப் எம்.எஸ்.அப்பாஸ்

ஆகியோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

வே.ஸ்ரீரங்கராஜன்
(தலைவர்)
பசும்பொன் மாவட்ட
கலை-இலக்கிய வரலாற்று ஆய்வு மையம்

சிவகங்கை

10.12.1996

ΧΙΙ