பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

90. படாக தானபூர்வமாக தாம்பிரசாதன பட்டையம் கட்டளை
91. யிட்டோம் ஆச்சந்திரார்க் ஸ்தாயி ஆக சந்திராதித்த சந்
92. திர சந்ததி பிரவேசம் உள்ளவரைக்கும் எங்கள் புத்தி
93. ர பவுத்திர பாரம்பரையாகவும் தங்கள் சிஷ்யாள்ப
94. ரம்பரையாக ஆண்டனுபவித்துக் கொண்டு தர்ம பரிபாலண
95. ம் பண்ணிக்கொண்டு வருவார்களாகவும் இந்த தர்மத்தை யாத
96. மொருதர் பரிபாலனம் பண்ணின பேர்கள் காசியிலேயு
97. ம் கங்கைக் கரையிலும் ராமேசுவரத்தில் தனுக்கோடியிலும்
98. லும் கோடி சிவலிங்க பிரதிஷ்டையும் கோடி விரும
99. ப் பிரதிஷ்டையும் விஷ்ணுப்பிரதிஷ்டையும் கோதானம்
100. பூதானம் கன்னியாதானமும் பண்ணின பலனை பெருவாராக
101. வும் இந்த தர்மத்தை யாதாமொருதர் அகிதம் பண்ணினபே
102. ர்கள் காசிராமேஸ்சுப ரதனுக்கோடி கெங்கை கரையிலும்
103. கோடி விரும சத்திய மாதா பிதாவையும் அநேகங்ககோ
104. டி காரம் பசுவையும் கொன்ற தோஷங்களில் போக கட
105. வாராகவும்
109. இந்த சாசனம் எழுதினேன் ராயசம்கு
110 மாரப்பபிள்ளை குமாரன் சொக்கு சுவஸ்தி எழுதினேன்
111. சிவகெங்கையில் இருக்கும் தையல் பாகம் ஆசாரி குமாரன்
112. ஆறுமுகம் கையெழுத்து

6. ஆண்டான் கோயில் செப்பேடு

சோழ நாட்டில் உள்ள ஆண்டான் கோயிலுக்கு சிவகங்கைச் சீமை முத்துநாட்டு மீனாபூர் என்ற ஊரினை தானமாக வழங்கியதற்கான செப்பேடு. இதனை கி.பி.1799 விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர் வழங்கியுள்ளார்.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ மன்மகாமண்டலேசுனர் அரியராய தேளவிபாடன் பாசைக்கு தப்
2. புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட
3. நாடு கொடாதான் பாண்டி மண்டல ஸ்தாபனாசாரியன் சோழமண்டல
4. ப்பிறதிஷ்டாபனாசாரியன் தொண்டமண்டலச் சண்டப்பிறசண்ட ளீளமுங் கொ
5. ங்கும் யாட்பாணராயன் பட்டணமு மெம்ம மண்டலமுங் கண்டு கெஜவேட்டை
6. கொண்டருளிய ராஜாதிராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் ராஜகுல
7. திலகன் ராசகெம்பரன் ராஜகண்டிரவன் ராசாக்கள் தம்பிரான் அரசுரா
8. வணராமன் அந்தப்பிறகண்டன் ரற்றின கிரீடாதிபதி ரற்றினசிங்காசனா
9. திபதி சூரியகுல துங்கன் சந்திரகுலதிலகன் கிஷ்ணாவதாரன் கிளைவாள