பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 147

ஆண்டாங்கோவில்

56. செம்பிநாதசுவாமி சிவசேகரியம்மனுக்குச் சிறுவயலிலிருக்கும் சிவகோத்தி
57. ரத்தில் சுடலைமுத்தாபிள்ளை மகன் அட்டவணை மாயாண்டியாபிள்ளை கட்டளை!
58. காலசந்திப் பூசைக்குச் சறுவமாணிபமாகப் பூதான சாஸநம் பண்ணிக்கொடுத்த
59. க்ஷெந்திரமாவது பாண்டி தெச(த்★)தில்ச் சிவகெங்கைச் சீமைச் சாக்கைத் தாலூ
60. கா முத்துனாட்டு மாகாணத்தில் மீனாப்பூருக்கு பெருனான் கெல்கை கண்டபடி
61. எல்கையாவது கீழ்பாற்கெல்லையாவது சடையாமங்கலங் கணவாயுள் த்
62. தரவில் நிற்குங் கடப்பமரங்களுக்குங் கட்டைப்புளிக்கு மெற்குத் தென்பா
63. ற்கெல்கையாவது மெற்படி கணவாய்த் தென்கடைக் கொம்புக்குளக்காலு
64. க்கு வடக்கு மெல்பாற்கெல்லையாவது குணக்கரைச்சி கூறணியாக்கி மூலை
65. க்கும் வா(கா)ன் செய்க் கீழ்வரப்புக்குங் கிழக்கு வடபாற்க் கெல்லையாவது
66. மீனாப்பூர் திடல் பிள்ளையார் கோவிலுக்கும் மெல்ப்படியூரும் பளச்செய்
67. வடவரப்புளுந் தெற்கு இன்னான் கெல்கைக்குட் பட்ட மீனாப்பூர் ஊரது புர
68. வுக்குள்ள நஞ்சை புஞ்சை திட்டுத்திடல் குட்டங்குழி நத்தஞ் செய்த்தலை.
69. மாவடை மரவடை மேனொக்கிய மரங் கீள்னோக்கி யகிணறு பாசி படுகையா
70. ற்றுக்கால் நூற்றுக்கால் நீதிநிட்செப செலதரு பாஷாணா க்ஷிணகா(ஜி) சி
71. த்தசாத்திய மென்று சொல்லச் செய்த அஷ்ட்ட பொகதே சுவாமிய
72. ங்களும் .......... விக்கிறயங்களுக்குக்கும் யொ...மாகச் சறுவ
73. மாணிபமாய் ஷாநராவநம் பண்ணிக் கொடுத்து மாயாண்டியாபிள்ளை
74. யத்தானே கிறாமங் காடு கொண்டு பாளாயிருக்குறதைச்சுதை பண்ணி
75. வைய்த்து கொவிலுக்குத் தன் கட்டளைகால சந்திப் பூசையுந் திருப்பணியும்
76. நடப்பிவிச்சுக்கொண்டு கிறாமத்து விசாரணையுங் கட்டளைவிசாரணையும் பாரம்
77. பரையாகத் தானே விசாரித்துக் கொண்டு கிறாமவிசாரணை கடனைவிசாரணை