பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

78. க்குக் கிறாமத்து மேல்வார ஊதியத்தில் நித்தியமொரு பணமுங் கிறாமத்து ந
79. ஞ்சை புஞ்சை நிலமெல்லாம் பண்ணை பாதி குடிபாதியாகப் பிறித்து பாதிநில
80. த்தில் தன் ஏர் வைத்து விவசாயஞ் செய்து அதில் வருகுற குடிவாரம்
81. கட்டளையாக வெடுத்து கொண்டு ஆசந்தராற்க ஸாயியாகச் சந்திரம
82. தித்தி சந்திரப் பிறவெசமுள்ளவரைக்குங் கல்லுங் வெரியும் புல்லும் பூமி
83. யும் உள்ளவரைகும் புத்திரபவுத்திரபாரம் பாரெயாகக் கொவில் கட்டளை
84. ப்பூச நெய்வதனமுந் திருப்பணியு நடப்பிவிச்சுக் கொள
85. க்கட்டளையிட்டொ மிந்தத் தன்மத்தை யாதொருமொருதர் பரிபாலனம் பண்
86. ண்ணினபேற்கள் காசியிலெயும் கெங்கைக் கரையிலெயும் இராமீசுரந்த
87. னுக்கொடிக் கரையிலெயூங் கொடி சிவலிங்கப் பிரதிட்டையும் கொடி
88. டி பிறமப்பிறதிட்டையுங் கோடி கோதான பூதானம் பண்ணின பல
89. னையு மடைவராகவூ யிந்தத் தன்மத்துக்கு யாதாமொரு (த★)தர் அகீதம்ப
90. ண்ணினபேர்கள் காசியிலேயும் கெங்கை கரையிலேயூ ராமெ.
91. சுரந் தனுக்கொடியருலயுங் கோடி பிரமத்தியும் மாதாபிதாவை
92. யுங் கொடி காராம்பசுவையுங் கொன்ற தொஷங்கிளிற் பொவா
93. ராகவூ ..................
94. ...................
95. யிருக்கு மன்னப்பத்தற் மகன் வீரப்பபத்தன் சுக லிகிதம் (11★)

7. வேட்டைக்காரன்பட்டி செப்பேடு

இந்தச் செப்பேட்டினை வழங்கியவர் சிவகங்கைச் சீமையின் இறுதி மன்னரான முத்து விசைய ரெகுநாத பெரிய உடையாத் தேவர் அவர்கள். 24.1.180 தேதியன்று வழங்கியது ஆகும். சிவகங்கைச் சீமையின் கிழக்கு கடற்கரையையொட்டி வடக்கு தெற்காக அமைந்துள்ளசேதுமார்க்கத்தில் வேட்டைக்காரன் பட்டியில் அமைந்துள்ள சின்னணமட தர்மத்திற்காக அமராவதி மாகாணத்தில் உள்ள தாணாவயல் என்ற ஊரினைச் சர்வமான்யமாக வழங்கியதைக் குறிக்கும் ஆவணம் இது.

1. ஸ்வஸ்திஸ்ரீமன் மஹாமண்டலேசுபரன் அரியராயர்தளவிபாடன்
2. பாசைக்கி தப்புவராயர் கண்டன் கண்ட னாடு கொ
3. ண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டிமண்டல பிரபனாசாரி
4. யன் சோளமண்டல பிரதிஷ்டாபனாசாரியன் தொண்டமண்ட
5. ல சண்டப்பிறசண்டன் ஈளமும் கொங்கும் யாப்பினராயன்
6. பட்டணமும் யெம்மண்டலமுங் கண்டு கெச வேட்டை கொண்ட