பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

15. வன் விரையாத கண்டனில் விளங்கிய தீரன் எதிரிட்ட மரு
16. வலர்கள் சிரமுருள வெட்டி நிலையிட்ட தீரன் செங்காவி குடையா
17. ன் பரராசகேசரி இரவி குல சேகரன் புவநேக வீரன் அரச ராவண ரா
18. மன் அடியார் வேளைக்காறன் பரதள விபாடன் உரிகோல் சுரதா
19. ணன் கொட்டமடக்கி வய்யாளினாநாயணன் வீர வெண்பாமா
20. லை உபைய சரமாலை உல்லாச நளினக்காறன் இளஞ்சிங்கம் தள
21. ஞ்சிங்கம் மதுரைராயன் துரைகள் சிகாமணி ஆத்துபாச்சி கட
22. லில்ப் பாச்சி மதப்புலி சினப்புலி தாலிக்குவேலி செம்பி வ
23. ள நாடன் கெங்கையதிபன் தொண்டியந் துறை காவலன்
24. அனுமகேதநன் கருட கேதனன் வியக்கிற கேதனன் சிங்க கே
25. தனன் மீனகேதனன் காவாகேதனன் நெமிலி கேதன கருட
26. கேதனன் சத்திய அரிச்சந்திரன் சேமத்தலை விளங்குமிகு தாளினா
27. ன் அன்னகொடி விளங்கிய தீரன் செய்யதுங்க ராயர் விருபா
28. ட்சிராயர் கிஷ்டிணராயர் வங்கிசாதிபனான பிறதிவிராச்
29. சியம் பண்ணிச் செல்லா நின்ற சாலிவாகன சகாத்தம் 1616
30. 13 உ இதன் மேலது மேதி ளூ காற்த்திகை மீ 27 உ சுக்குறவார
31. மும் அம்மாவாசையும் சேட்டா நட்செத்திரமும் சூரிய கிரண புண்
32. ணிய காலத்தில் சுபயோக சுபகரணங்களும் பெற்ற சுபதின
33. த்தில் குலோத்துங்க சோழப் புனப்பிரளைய நாட்டிலிருக்கும்ெ
34. சயதுங்க வங்சாதிபனான குளந்தை நகராதிபதியான வடகரைப் புலி
35. அரசு நிலையிட்ட விசைய ரெகுனாத சசிவர்ண பெரி உடையாத் தேவ
36. ரவர்கள் புத்திரன் அரசு நிலையிட்ட முத்து வடுகனாத சசிவற்ண பெரி உ
37. டையாத் தேவரவர்கள் ராமீசுரம் ராமனாதசுவாமி பூசை
38. பண்ணுகிற பிரவாகர குருக்களுக்குத் தாறாபூறுவமாகக் குடுத்த ஆ
39. ச்சாங்குடி இந்த யேந்தலுக்கு பெருனாங்கெல்லை கூறுவ
40. து கீள்பாற் கெல்லை மறுச்சுகூட்டி கண்மாய்க் கரைக்கு மேற்கு
41. தென்பாற் கெல்லை வளந்தமுடையார் தற்மத்துக்கு வடக்கு மே
42. ல் பாற்கெல்லை சரவணப் பொய்கைக்கு கிளக்கு வடபாற்
43. கெல்லை மாலாண்டான் கண்மாய்க் கரைக்கு தெற்கு இன்
44. னான்கெல்கைக்கு உள்பட்ட நஞ்சை புஞ்சை மாவடை மர
45. வடை திட்டு திடல் சகலமும் சறுவ மானியமாக தானாதி
46. பூறுவமாகக் கட்டளையிட்டோம் இந்தப்படிக்கு சந்திராதித்தியவரை
47. சந்திரப் பிரவேசம் உள்ளமட்டும் ஆண்டனுபவித்துக் கொள்
48. வராகவும் இந்த தற்மத்தை பரிபாலனம் பண்ணின பேர்கள் காசி
49. யிலேயும் சேதுவிலேயும் கோடி சிவலிங்கப் பிறதிட்டையும்
50. கோடி பிறம்மப் பிறதிட்டையும் பண்ணின பயத்தை அடைவரா
51. கவும் இந்த தர்மத்துக்கு துரோகம் பண்ணின பேர்கள் காசியி
52. லேயும் சேதுவிலேயும் கோடி பிறுமகத்தி கோடி கோக
53. த்தியும் பண்ணின தோசத்திலே போவராகவும்.