166 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
திருபுவனம், திருப்புத்தூர், மானாமதுரை, பார்த்திபனூர், பிரான்மலை, அனுமந்தக்குடி, சூரக்குடி, காளையார்கோவில் ஆகிய ஊர்களில் அமைந்து இருந்த கோட்டைகள் இடித்து அழிக்கப்பட்டன.[1]
ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஜமீன்தார்கள் ஆட்சியில் தர்ம காரியங்களுக்கு முழுமையான கிராமங்களை வழங்குவதில் பல சிக்கல்கள் இருந்தன. சில சிறப்பான செயல்களுக்காக ஜமீன்தாரியில் அடங்கியுள்ள சில ஊர்களை திருக்கோயில், தனியார் ஆகியவர்களுக்கு இனாமாக வழங்குவதற்கு ஜமீன்தார் விரும்பினாலுங்கூட, அந்த ஊர்களுக்கு நிகுதி செய்யப்பட்ட தொகையை பொறுப்புத்தொகை (குயிட் ரெண்ட்)யாக கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், கெளரி வல்லபரிடத்தில் மேலோங்கி நின்ற ஆன்மிகப் பிடிப்பு காரணமாக சில கிராமங்களை சர்வ மான்யமாக வழங்கி உதவியுள்ளார். அவைகளுக்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள சில குறிப்புகளில் இருந்து கீழ்க்கண்ட திருக்கோயில்கள், திருமடங்கள், தனியார்கள் ஆகியோர் அவரது அறக்கொடைகளைப் பெற்று இருந்ததை அறிய முடிகிறது.[2]
கி.பி | அன்னவாசல் | இராமநாதசாமி ஆலயம், | |
1829 | இராமேஸ்வரம் | ||
1802 | மாறனி | சர்வேஸ்வரர் ஆலயம், சருகணி (தேவாலயம்) | |
1816 | நசர்புளியன்குடி | முகம்முது நபி மௌறவீது விழாவிற்கு | |
1816 | கமுதக்குடி | மீனாட்சி சுந்ததரர் ஆலயம், மதுரை | |
1828 | கீழ்சேத்தூர் | சந்திரசேகர சுவாமி கோயில். |
கி.பி | வாவியேந்தல் | இராமசாமி பரதேசி - போதகுரு சாமிமடம் |
கி.பி | மணக்குடி | சிவராவ் தர்மசாசனம், | |
1801 | புன்னன்குடி மணிமுடி ஏந்தல் கருத்தன் ஏந்தல் பொட்டல் வயல் |
ஊழியமானியம் ஜீவித இனாம் திருப்பதி ஐயன், தர்மாசனம் ஜீவித இனாம் |