டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 167
1802 | சூரிக்கன்ஏந்தல் | வரதாச்சாரியார், தர்மசாசனம் | |
1823 | நெட்டிஏந்தல் | சங்கர அய்யன் | |
1829 | தடங்குண்டு சித்தாட்டி உமச்சிப்பட்டி பொன்னம்பட்டி,கட்டனூர் முதலான ஒன்பதுஊர் |
சுப்புராயர் சுப்பிரமணியம் ஆபத்து உத்தாரண ஐயர் இருஞ்சிறைகருப்பாயி ஆத்தாள் மாணிக்கம் ஆத்தாள் |
- இந்த நிலக்கொடைகள் தவிர கிடைத்துள்ள இரு செப்பேடுகளின் உண்மை நகல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
(முதல் பக்கம்)
சமய நல்லிணக்கத்திற்கும் சமரச மனப்பான்மைக்கும் பெயர்பெற்ற சேதுபதிகளது வழித்தோன்றளான சிவகெங்கையின் முதலாவது ஜமீன்தார் படமாத்துர் கெளரி வல்லப உடையாத் தேவர் அவர்கள் தமது முன்னோரைப் போன்று திருமடங்களுக்கும் கோவில்களுக்கும் தனியார்களுக்கும் பல அறக்கொடைகளை வழங்கியதை வரலாற்றில் காண முடிகிறது. சாக்கை வட்டம் கோழியூரில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களது தொலுகைப் பள்ளிக்கும், திருப்புவனம் வட்டம் புளியங்குளம் நபிகள் நாயகம் அவர்களது பிறந்ததின மெளலி விழா கொண்டாடுவதற்கும் நிலக்கொடைகளை ஏற்கெனவே வழங்கியுள்ளார். இப்பொழுது அவரது குடிகளில் சிறுபான்மையினரான கிருத்துவர்களுக்கு சருகணி தேவலாயத்திற்கு கி.பி. 1802-ல் சருகணிமாரனேந்தல் கிராமத்தில் சர்வமாணியமாக வழங்கியதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது.
1. சுபஸ்ரீ மன் மகாமண்டலிசுபரன் அரி
2. யாயிர தளவிபாடன் பாசைக்கு தப்பு வார்க்க
3. ண்டன் மூவராய கண்டன் கண்டனாடு கொண்டு
4. கொண்டனாடு குடாதான் பாண்டிமண்டல
5. தாபனசாரியான் சோளமண்டல பிரதிஷ்டபனா
6. சாரியான் தொண்டமண்டல சண்ட பிரசண்டன்
7. இளமும் கொங்கும் யாட்பாணமும் கெசவேட்டை
8. கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுரன் ரா
9. சமார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசகுலதிலகன்
10. இவுளி பாவடி மீதித் தேறுவார் கண்டன் மலை கலங்
11. கிளு மனங்கலங்காதகண்டன் அன்னதான சத்
12. திரசோமன் வடகரைப்புலி சாமித்துரோகிகள் தலைமீதி