பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

13. ணிக்கொடுத்தபடியினாலே இந்தக்கிறாம நா
14. ன் கெல்லைக்குள்ப்பட்ட நஞ்சை புஞ்சை தி
15. ட்டுதிடல் மேல்நோக்கிய மரம் கீள்நோக்
16. கிய கிணறு பாசிபடுகை நிதிநிட்சேபம்
17. ஸ்ரீராமஜெயம்
18. செலதரு பாஸாணம் புண்ணியகா
19. மிய சித்தசாத்தியமென்று சொல்
20. லப்பட்ட போகதேச்சுவாமியங்கனா
21. ளும் நிலவரி கீதாரவரி வெள்ளக்குடை
22. வரி கரை மணியம் சகலமும் சறுவமா
23. னியமாக ஆண்டனுபவித்துக்கொள்
24. வரராகவும் இந்த தர்மசானத்துக்கு
25. ஆதாமொருதர் புரோவிற்த்தியாக
26. பரிபாலனம் பண்ணி வருகிற பேர்
27. காசியிலும் றாமிசுபரத்திலும் பி
28. றம்மப்பிறதிஷ்டை சிவப்பிறதி
29. ஷ்டை விஷ்னுப்பிறதிட்டை பண்ணி
30. பலனை யடைவராகவும் இந்த தற்
31. மத்துக்கு அகிதம்பண்ணின
32. பேர் ராமீசுரம் காசியில் கெ
33. ங் கையில் காராம்பசுவை வதை
34. பண்ணின பாவத்தை யனு
35. பவிப்பாராகவும் இந்தப்ப
36. டிக்கி இந்த சறுவமானியதற்
37. ம பூசாதன மெளுதினேன் சிவ
38. கெங்கையிலிருக்கும் தற்
39. மப் பள்ளிக்கூடம் திருக்கா
40. லிங்கவாத்தியார் குமார
41. ன் ஆண்டபெருமாள்
42. கையெளுத்து.


கெளரி வல்லபத் தேவர் ஜமீன்தார் ஆவதற்கு முன்னர் நான்கு மனைவிகளையும், ஜமீன்தார் ஆன பிறகு மூன்று மனைவிகளையும், மொத்தம் ஏழு பேரை மணந்து இருந்தார். இவர்களைத் தவிர பிரதானி சின்ன மருது சேர்வைக்காரரால் காளையார் கோவிலில் காவலில் வைக்கப்பட்டிருந்தபொழுது, கருப்பாயி ஆத்தாள் என்ற கணிகையைக் காதலித்து மணந்தார். அவர்தான் காளையார் கோவிலில் இருந்து அவர் தப்பிச் செல்வதற்கு உதவியவர். அங்கிருந்து தொண்டமான் சீமைக்குச் சென்று அங்கு அறந்தாங்கி காட்டில் வாழ்ந்தபொழுது மாணிக்க ஆத்தாள் என்ற பெண்ணையும் குருவாடிப்பட்டி கருப்பாயி ஆத்தாளையும் மணந்து இருந்தார். இதோ அவர்களது பெயர்கள்: