பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


13. சிவகங்கை வரலாற்றை சீரழித்த நூல்கள்




1. சிவகங்கை அம்மானை

தமிழ்நாடு அரசு பதிப்பு (1954), சென்னை.

நாடோடி இலக்கியம் என்ற வகையில் சிவகங்கை அம்மானையில் வரலாற்றுக்கு தொடர்பு இல்லாத எத்தனயோ செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அவைகளை எல்லாம் இலக்கியத்தின் கதைப் போக்கிற்காக இணைக்கப்பட்டுள்ளவை எனப் புறக்கணித்து விட்டாலும் சில முக்கியமான பகுதிகள் வரலாற்றிற்கு முரணாக மட்டுமல்லாமல் இந்த நூலின் வரலாற்று நாயகர்களான ராணி வேலுநாச்சியாருக்கும் அவரது பிரதானிகளான மருது சேர்வைக்காரர்களுக்கும் தீராத பழி ஏற்படுத்தும் பாங்கில் அமைந்திருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

அ. மருது சகோதரர்கள் மன்னர் முத்துவடுகநாதரது ஆட்சியின் பொழுது, (கி.பி. 1750-72) சிவகங்கை அரண்மனைப் பணியில் அமர்ந்தவர்கள். கி.பி.1780-ல் ராணிவேலுநாச்சியார் சிவகங்கையை ஆற்காட்டு நவாப்பிடமிருந்து மீட்டு அவர் ஆட்சியைத் தொடங்கியபொழுது அவர்கள் இருவரையும் பிரதானிகளாக நியமனம் செய்தார் என்பது வரலாறு.
கி.பி.1772-ல் நவாப்பும் கும்பெனியாரது படைகளும் இணைந்து சிவகங்கைச் சீமை மேல் படை எடுத்து வந்தனர்.காளையார் கோவில் கோட்டைப் போரின் பொழுது 25.6.1772-ல் குண்டடி பட்டு மன்னர் முத்துவடுகநாதர் தியாகி ஆனார் என்பது வரலாறு. (பார்க்க: