பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

விலகினார் என்பதும் மருது சகோதரர்கள் பிரதானிகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர் என்பதும் அந்தச் செய்தி.

ஆ. காளையார் கோவில் கோட்டைப் போரில் 25.6.1772-ல் மன்னர் முத்து வடுகநாதர் தியாகியானார் என்ற வரலாற்று உண்மைக்கு முரணாக,

'துங்கின துரையும் ராணியுந்தான்
இப்ப வெடிச்சத்தம் ஏதெனவே
இருபெரும் கைகோர்த்து வெளியில் வந்தார்
கண்ட சிப்பாயும் சுட்டிடவே
கர்த்தனாம் ராணியும் பட்டிடவே...'

என்று மன்னர் முத்து வடுகநாதரது தியாகத்தை மறைத்து அவரது பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கும்மித் தொடர் அமைக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கையை மீட்டபிறகு, ராணி வேலு நாச்சியார் மருதிருவரை பிரதானி தளகர்த்தராக நியமனம் செய்தார். அவர்கள் இருவரும் கி.பி.1780 முதல் அந்தப்பணியில் இருந்து வந்தனர். தமக்கு ஆண்டுதோறும் பேஷ்குஷ் தொகையை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில், புதிய அரசை நவாப் அங்கீகரித்து இருந்தார். அந்தத் தொகை செலுத்தப்படாததால் 4.81783-ல் தளபதி புல்லர்ட்டன் தலைமையில் கும்பெனியாரது படைகள் சிவகங்கை வந்தது. பிரதானிகளான மருதிருவரிடமிருந்து நாற்பதினாயிரம் பொன்னும், பாக்கிக்கு பொறுப்பும் எழுதி வாங்கிய பிறகு அந்தப் படையணிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. (பார்க்க தளபதி புல்லர்ட்டனது அறிக்கை)

ஆனால் சிவகங்கை கும்மி, மருதிருவரும் சென்னை சென்று கவர்னரைப் பேட்டி கண்டதாகவும், அவர் அவர்களை சிவகங்கைச் சீமைக்கு பேஷ்குஷ் தொகை செலுத்த வேண்டாமென்று தெரிவித்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றது. மருதிருவர் சென்னை சென்றதாக எந்த செய்தியும் இல்லை. இப்பொழுது சிவகங்கைக் கும்மி வரிகளைப் பார்ப்போம்.

“......மருதிருவர்
தெளிந்து முகமலர்ந்து தீர்வை
பகுதிக்குத் தரவு என்ன என்றும்
கும்பினிக்கு நீங்கள் பிள்ளையென்று
குறிப்பிட்டு நாங்கள் எண்ணினதால்
அன்புடன் நீங்கள் நமக்கு மட்டும்
ஆன பகுதி தர வேண்டா மென்றார்....
சீராய் நடந்து புவிசெல்லு மென்றார்.”