பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

அவரிடம் ஒப்படைத்தனர்.'

“ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு துறவற வாழ்க்கையை மேற்கொள்ள முடிவு கட்டினார். மருதிருவரை அழைத்து வரச்செய்தார். வாளை பெரிய மருதுவிடமும், முத்திரை மோதிரத்தை சின்ன மருதுவிடமும் ஒப்படைத்தாள். அரசியல் வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.” (வேலு நாச்சியார்)

மிக அருமையான புதிய கண்டுபிடிப்பு. ஆசிரியருக்கு இந்தச் செய்திகள் எங்கிருந்து கிடைத்ததோ! நல்ல பகல் நேரத்து உறக்கத்தில் உதயமாகி இருக்க வேண்டும்.

பக்கம் 127

“... சசிவர்ணத் தேவர் வழிவந்தவரே மருது பாண்டியர் என்பதற்கும் அவர்கள் சீமையை ஆளும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டும்படி (கலெக்டர்) கட்டாயப்படுத்தினான்."

இதற்கான ஆதார ஆவணம் எதுவும் இல்லை.

பக்கம் 147

'... வேலுநாச்சியாருக்கு நேரிடையான வாரிசுகளில் யாரையேனும் ஒருவரை மருது சகோதரர்கள் தேர்ந்தெடுத்து இருக்கலாமல்லவா?"

வேலு நாச்சியாரது மகள் வெள்ளச்சியை மணந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவரைப் பற்றி ஆசிரியர் அறிந்து இருக்கவில்லை எனத் தெரிகிறது!

5. சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் (1986)

ஆசிரியர்: கோவி.மணிசேகரன்

வெளியீடு: வானதி பதிப்பகம், சென்னை-17.

ஒரு காட்சி

‘மறக்குலத்துப் பெண் ஒருத்தி அதிலும் அரச மரபைச் சேர்ந்தவள். குதிரைச் சவ்வாரி செய்யும்பொழுது அவளது குதிரை மிரண்டு காட்டுக்குள் ஓடுகிறது. இதனை எதிர்பார்த்து இருந்தவனைப் போன்ற ஒரு முரட்டு இளைஞன் ஒருவன் வழியில் இருந்த ஒரு மரத்தின் மேலிருந்தவாறு அவளை பற்றி தூக்கி காப்பாற்றுகிறான். இருவரும் காதல் கொள்கின்றனர்.’
‘அவனை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்று தனி அறையில் தங்குமாறு செய்கிறாள். அவனிடம் வாய் பயிற்சியும் வளரிப் பயிற்சியும் பெறுவதற்காக அழகுமிக்க அந்த அறையில் விரிக்கப்பட்ட இரத்தின’