பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 209

கம்பளத்திற்கு மேல் உள்ள பெரிய கட்டில் அதில் தடித்த பஞ்சு மெத்தைகள், இருக்கைகள் - இவைகளை கூர்ந்து கவனிக்கும் அவனைப் பார்த்து. "எதற்கும் அவசரம் கூடாது” என்று சொல்லி பொறுமையாக இருக்குமாறு அவள் புத்திமதி சொல்கிறாள்.
கொய்யாத பழமான அவளை விரும்புவதாக அவன் சொன்னதற்கு அவள் "எதற்கும் ஒரு காலம் இருக்கிறது” என்று சொல்லி காத்திருக்கப் பணிக்கிறாள். காத்திருக்கலாம் என்பதற்கு என்ன அத்தாட்சி என அவன் கேட்கிறான். தனது ஒற்றைக் கல் மோதிரத்தை அவனது விரலில் அணிந்து அதனை அத்தாட்சியாக கொள்ளுமாறு சொல்கிறாள் அவள்.

இன்னுமொரு காட்சி

சிவகங்கை அரண்மனையில் ஒரு இரவு கூத்து நடக்கிறது. அதனைப் பார்த்து பொறுமை இழந்த அந்தக் கன்னிகை இடையில் எழுந்து அவளது அரண்மனையில் மாடியிலுள்ள தனியறைக்கு செல்லுகிறாள்.
தனது ஆபரணங்களை கழற்றி ஒரு பேழையில் வைத்துவிட்டு பொன் வேய்ந்த இரவிக்கையை களைந்தாள். உள்ளே இறுக்கமாக இருந்த கச்சினை கழற்றியெறிந்துவிட்டு இடுப்பில் பாவாடை போன்ற சுற்றி இருந்த துணியை தளர்த்திவிட்டாள். அதுவும் கூட அவளுக்கு பளுவாகவும் சங்கடமாகவும் இருந்தது போலும். அதனையும் அவிழ்த்துப் போட்டாள். ஆடைதாங்கியில் இருந்த மெல்லிய சேலையை எடுக்கப் போனாள். அப்பொழுது அவளது கட்டிலின் கீழ் ஒளிந்து இருந்த வெள்ளை மருது வெளியில் வந்தான். நிர்வாணமாக இருந்த தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை மெல்லிய துணி கொண்டு மறைக்க படாதபாடுபட்டாள். அலங்கோலமாக வாரிச் சுருட்டிப் போர்த்தி உடலை மறைக்க முனைந்தாள்.
"ஏன் இந்த சிரமம் நான்தானே இருக்கிறேன். வேறு யார் இருக்கிறார்கள்?” அந்த இளைஞனது கேள்வி. அரண்டு மிரண்டு போன வேலுநாச்சியின் உடலோடு ஒட்டியிருக்கும் சேலை நழுவி விழுந்ததை எடுத்து தனது கரத்தால் அவள் மீது போட்டோன். அப்போது அவனது முரட்டு விரல்கள், அவளது கவர்ச்சியான அங்கங்கள் மீது பட்டு மின்னல் உணர்வை தூண்டி ஒரு கணம் சிலிர்க்க வைத்தது. அவள் நாணத்தால் தலைகுனிந்த வண்ணம் “இது மாளிகை கீழே காவல் வீரர்கள் காத்து இருக்கிறார்கள், மெதுவாகப் பேசுங்கள்” என்றாள்.

மற்றும் ஒரு காட்சி

இரவு அந்தகாரத்தில் ஆழ்ந்து கிடந்தது. குகையில் இரண்டு தீப்பந்தங்கள் செவ்விய ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தன. எழுந்து