பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

படைகள் புறப்பட்டன......”
“அருகே சேது நாட்டில் தாமோதரப்
பிள்ளை, படை கொண்டு எதிர்க்கச் செய்தார்....."
“தஞ்சை வேந்தனைச் சிதறியடித்து
ஓட ஓட விரட்டின."

இந்த நிகழ்ச்சியை இது தொடர்புடைய செய்திகளைப் பார்க்கும்பொழுது, நூலாசிரியர் கி.பி. 1751-ல் அனுமந்தக்குடி மீதான தஞ்சைத் தளபதியின் படையெடுப்புடன் கி.பி.1771-ல் இராமநாதபுரம் மீது தஞ்சை மன்னர் தொகுத்த படை எடுப்புடன் குழப்பிக் கொண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிய வருகிறது.

இந்தப் போரில், இராமநாதபுரம் கோட்டை மீதான முற்றுகை நாற்பது நாட்களுக்கு மேலாக நடைபெற்றாலும் தஞ்சைக்கு வெற்றி கிட்டவில்லை. ஆதலால் இராமநாதபுரம் ராணியுடன் உடன்பாடு கண்டு திரும்பினார் என்பது வரலாறு.

(பார்க்க: Dr. K.Rajayyan - History of Madura) ஆதலால் இங்கு நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல தஞ்சை மன்னர் புறமுதுகிட்டு ஓடவில்லை. அவரது உடலிலும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் அவர் சிவகங்கை மீது படையெடுத்தபோது, ஆற்காட்டு நவாப்பினால் தஞ்சைக்கு அபாயம் ஏற்பட்டதால், திட்டத்தை கைவிட்டு தஞ்சை திரும்பினார். இதுதான் வரலாறு.

பக்கம்: 405-408

"1772 ஆம் ஆண்டு மே மாதம்......'
'12, 18 பவுண்டு எடையுள்ள குண்டுகள் தேவைப்பட்டன. அந்த இராமநாதபுரத்துச் சிறு கோட்டையைத் தாக்க!! அதன்பின் கோட்டை தகர்ந்தது. இப்படியாகச் சில நாள் முற்றுகை...'
'பெரியசாமி. அமைச்சர் தாமோதரம் பிள்ளையைக் காணச் சென்றான்...'
'சற்றும் எதிர்பாராத வகையில் துரோகி பெரியசாமி, கட்டாரியுடன் தாமோதரப் பிள்ளையின் மீது பாய்ந்து கொலை செய்து விட்டான்."
"......இளவரசன் இராமலிங்க சேதுபதி,
... கட்டாரியை எடுத்துக் குறி பார்த்து எறிந்தான்... புழுவாய் துடித்துத் தரையில் சாய்ந்தான் துரோகி பெரியசாமி.”

இந்த நிகழ்ச்சி முழுமையும் கற்பனையானது. இராமநாதபுரம் அமைச்சர்