இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
250 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
பக்கம்: 626
- “... களத்தில் எதிரிகள் இல்லாமல், வெற்றுக்கோட்டையைப் பிடித்துவிட்டு, அக்னியூ வெற்றி வெற்றி என்று வீராப்புக் கொண்டது வீண் பெருமையாகக் கருதப்பட்டது.'
- ... ஒரு சுடுகுஞ்சுகூட காளையார் கோவிலில் இல்லாமல் ஊரைவிட்டே முன்பு சென்று விட்டனர். 70,000-க்கு குறையாத படை வீரர்களைக் கொண்ட மருதிருவரிடம் எவ்வளவு பீரங்கிகளும் பிற ஆயுதங்களும் இருந்திருக்கும்?"
பக்கம்: 643
- 'துரைச்சாமி தவிர அவரது குடும்பத்தின் ஆடவர்கள் தூக்கிலிடப்பட்டனர்."
- 'இராமநாதபுரம் புரட்சி அரசின் சேதுபதியாக்கப்பட்ட முத்துக் கருப்பத் தேவர் உட்பட."
- '24.10.1801 தேதி தூக்கிலிடப்பட்ட மருதிருவரின் உடல்கள் மூன்று நாட்கள் கழித்து 27.10.1801-ம் தேதி அன்று காளையார் கோவிலில் அடக்கம் செய்ய நேர்ந்தது எனத் தீர்மானிக்க முடிகிறது.'
பக்கம் 432
- 'கிழவன்.சேதுபதி நிறுவிய இராமநாதபுரம் சூரங்கோட்டை இராணுவப் பயிற்சி சாலையில் பயின்று வெளிவந்த மருது பாண்டியர் அவர் நினைவாக, கிழவன் சேதுபதி சிலையை காளையார் கோவிலில் ஆலயத்தில் நிறுவினார்."
பக்கம்: 648
- "வேங்கன் பெரிய உடையாத் தேவர் மட்டும் பெங்கோலோன என்னுமிடத்திற்கு நாடு கடத்தப்பட்டார்.'
பக்கம்: 594
- "கெளரி வல்லபரின் ஆட்கள் அங்கு அப்படியொரு பிரச்சாரத்தை பரப்பியிருந்தனர். பாஞ்சாலங்குறிச்சிப் போராளிகள் இங்கு வந்ததால் இனி இங்கு உணவு கிடைப்பது சிரமமாகிவிடும் என்று திண்ணைப் பிரச்சாரம் நடத்தினார்கள்."