பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 255


சூறைமங்கலத்தார் பட்டயம்

இந்தப்பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1389. தாரண வருடம் ஐப்பசி 14ம் தேதி சவுந்திர பாண்டியராசா என்பவர் பொன்னமராபதி நாட்டில் நான்கு வகைப் புரையமாற்கு வழங்கிய காணியாட்சியைக் குறிப்பிடும் ஏடாகும். இந்தப் பட்டயம் வரையப்பட்டதாகக் குறித்துள்ள சக ஆண்டும் தமிழ் வருடமும் இணைந்து வரவில்லை. ஆதலால் இது ஒரு பிற்காலச் செப்பேடாக அமைதல் வேண்டும்.


செப்பேட்டு வரிகள் 33-34-ல் மன்னர் பரிமீது சென்று காணியாட்சி நிலத்துக்கு அளவைக் காட்டிக் கொடுத்தார் என்ற செய்தி புதுமையானதாக உள்ளது.

1. உளூமகா மண்டல் லீசுபரன் அரிய
2. தள விபாடன் பாசைக்கித் தப்பூ மூவர
3. ரய கன்டன் கன்ட னாடு கொண்டு
4. கொன்ட நாடு குடாதான் பாண்டி
5. மண்டலத்தூர் அசுபதி கெஷபதி நரபதி
6. தேசு(வின்சு)றிய துரைச்சிய பாரம்ப
7. ன்னி யருளாயி நின்ற சாலிக வாக
8. ன சகாத்தம் 1389 கு மேல்
9. ச் செல்லாயி நின்றென தாறுன ளூ
10. அற்ப்பசி மாதம் 17 தேதி சீய சோள கெம்
11. பீர வளர் நாடாகிய கோனாடு பிறாம
12. லை சூள்ந்த பொன்னமராவதி (நா)ட்டில்
13. பொரு நல்லூரு ஆறை மங்கல(ட்டாற்)
14. கிய பொன்னமரா பதியில் வரிசைலே
15. அருக்கானி யாச்சிக்கி கற்த்தராகிய காருகா
16. ர்த்த வேளாளர் பட்டம் 7கு நத்தம் 705
17. 7க்கு குடிக்காடு 1511க்கு விறுமத
18. ரயா 21க்கு தேவதாயம் 212க்கு நா
19. டு 64க்கு தலையூராகிய ஒலியூர் கடத்தும் கா
20. ருக்காத்த வேளாளர் கரைச்சிட்டுப் போ
21. ட்டுக் குடுத்த கானியாச்சி யாவது வரிசை
22. ச இவ்வூருக் கானியாச்சிக்கி கற்த்தன்னா
23. க வந்த தெச்சினாபூமிக்கி கற்த்தனாகிய சே
24. து காவல்ப் புரையர்மற் மன்னர் வாள்
25. களக்கோட்டை ராயன் பட்டமான மங்கா
26. த்தார் பாண்டியர் தேவன் னுள்ளிட்டார்க்கும்
27. நேதிராயப் புரை உள்ளிட்டாற்கும் கன்டி
28. ய தேவன் நகுலராயன் னுள்ளிட்டாற்கு