பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 259


இரணியூர்க் கோவில் செப்பேடு - 1

பசும்பொன் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இரணியூர் கோவிலில் பாதுகாக்கப்படும். இந்தச் செப்பேடு "சாலிவாகன சகாப்தம் மன்மதம்" வரையப்பட்டதாகக் குறிக்கப்பட்டு, சக ஆண்டு குறிப்பிடப்படவில்லை. செப்பேட்டின் 'தல் 15 வரிகளில் கண்ட ஆட்சியாளர் பற்றிய வாசகத்திலிருந்து இந்தச் செப்பேடு பதினாறு அல்லது பதினேழாவது நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கொள்ளலாம்.

இரணியூர் செம்பகம் பேட்டையை கல்வாசல் நாட்டு நான்கு வகை வேளாளர்களும் ஊரவர்களும் அறவிலைப் பிரமாணமாகக் கொண்ட செய்தி இந்தச் செப்பேட்டில் உள்ளது.

"தொளிலாளி என்ற சொல் முதன் முறையாக இந்தச் செப்பேட்டில் (வரி. 83/54) கையாளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

1. ஸ்ரீ மகா மண்டல்லீசுபரன் அரியதள(வி)
2. பாடன் பாசைக்கித் திப்புமுவரயர் கண்ட ந
3. ரடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பாண்
4. டி மண்டலத்தாபனா (சானனா)ச்சொரியான் சே
5. சாள மண்டலப் பிரதேஷனாச்சாரியான் தெ
6. ரண்ட மண்டலப் பிரதேச்ச னனாச்சாரியா
7. ன் யீளமும் கபளமும் யாற்பாணமும் மங்கிசை
8. ச வேட்டை கொண்டருளிய ராசாதிராச
9. ன் ராசமாத்தாண்டன் ராசகெம்பீரன் ராச
10. பயங்கரன் ராசாக்கள் தம்பிரான் சம்மட்டி நா
11. றாயிணன் வங்கி நாராயணன் மல்லிகா ச்சி
12. ணராயர் மகாராயர் வீமராயர் விசைய ரா
13. யர் விருப்பாச்சிராயர் ஆனைகொந்தி ராயர் குறு
14. ம்பராயர் அசுபதி கெஷபதி நரபதி தெச்சிணாச்
15. தி சிறிது ராச்சியபாரம் பண்ணி அருளாயி நி
16. ன்ற சாலீகவாக (னஸா) காத்தம்
17. ச்செல்லாயி நின்றென மன்மத ளூ அற்ப்ப
18. சி மீ யகூ கானாடு படை பத்துக் கல்வாசல் ந
19. ரட்டில் குலசேகரபுரம் யிருணி வேளார் செம்பக
20. வேளார் ஆக்கொண்டவேளார் கணபதி வே
21. வளார் நாலுவகை வேளாற்கு களு ஊரா
22. மயந்த ஊர்ரவர்களும் அறவிலைப்புறமா
23. ணம்மாகக் கொண்டது ௸யூரில் லிருக்கு
24. ம் கருமாரு படை மண்ணர் முதலி காடப்பிள்
25. ளை உள்ளிட்டாரும் கந்தன்னாண்டியப்பன்
26. ணுள்ளிட்டாரும் காளியௗ கப்பன் னுள்ளிட்டாரு
27. ம் கள்ளமுளி பெரியளகன் னுள்ளிட்டாரும்
28. ஆக்கொண்டான் புள்ளான் னுள்ளிட்டாரு