பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 297

39வது முதலியார் சுரபித் திருமேனிக்கு பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசு.
141/1903 தேவராயர் மகாராஜா இராஜ்யம் பண்ணி அருளா நின்ற சகம். 1364 நாள்தோறும் அமுது செய்ய திருமஞ்சன சாத்துப்படி முதலியனவற்றிற்கு அறுநூற்றுவன் ஏரிதானம்.
142/1903 சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவற்கு ஆண்டு 3-வது திருதுந்தா விளக்கு தர்மமாக சாவா மூவாப் பேராடு 50 தானம்.
143-பி/1903 திருதுந்தா விளக்கு தர்மமாக சாவாமூவாப் பேராடு 50 தானம் அறப்பெருமை செல்வியார் திருமடத்துக்கு நுந்தா விளக்கு ஆடு 50 தானம்.
142-பி/1903 திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு யாண்டு 13-ன் எதிர் 14-வது துந்தா விளக்கு தர்மம்.
ஏ.ஆர்.144/1903 திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவற்கு யாண்டு 3.
145/1903 திருபுவன சக்கரவர்த்தி உடையார் பூபால புரந்தரன் சன்னதி அமுதுபடி சாத்துப்படிக்கு நிலதானம்
146/1903 கிருஷ்ணதேவமகராயர் 1440
147/1903 துவராபதிவேளார் கட்டிய பூபால புரந்தரன் சந்திக்கு சுரபி நாட்டு கொற்ற மங்கலம் தானம்
148/1903 சுந்தரபாண்டிய நாயகற்கு கோனாட்டு இடையாற்றுர் நிலதானம்
150/1903 திருபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு பத்தாவது காரையூர்