பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

படைக்கு உதவியது.
சூடியூர் சத்திரத்தில் கிளர்ச்சி அணித்தலைவர் மயிலப்பன் சேர்வையும் பெரிய மருது சேர்வைக்காரரும் சந்திப்பு.
1801. சிவகெங்கையில் இருந்து ஆயுதங்கள் பெற்று பாஞ்சாலங்குறிச்சி போரில் கும்பெனியாருடன் மோதி மரணகாயமுற்ற ஊமைத்துறை சிவகெங்கையில் அடைக்கலம் பெற்றது.
பிரதானிகள் மருது சேர்வைக்காரர்கள் அதிகார துஷ்பிரயோகிகள் என கும்பெனியின் பிரகடனம் வெளியிட்டு சிவகெங்கை மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என பயமுறுத்தியது.
சிவகெங்கை அரசமரபினரான படை மாத்தூர் கெளரி வல்லப ஒய்யாத் தேவருக்கு சோழபுரத்தின் சிவகெங்கை ஜமீன்தார் என கும்பெனியார் பட்டம் சூட்டியது.
காளையார் கோவில் போரில் மருது சேர்வைக்காரர்கள் தோல்வி. மருது சேர்வைக்காரர்களை கும்பெனியார் கைது செய்து, திருப்பத்தூரில் தூக்கில்போட்டது.
1802. சிவகெங்கை மன்னர் வேங்கண் பெரிய உடையாத்தேவரையும் தமிழ்நாட்டு போராளிகளுமாக மொத்தம் 72 பேரை நாடு கடத்தி பினாங்கு தீவிற்கு அனுப்பி வைத்தது.
பினாங்கு தீவு வாழ்க்கையில் வேங்கண் உடையாத்தேவர் காலமானது. (19.9.1802)
1808. சிவகெங்கை ஜமீன்தாரி மதுரைச்சீமை கலெக்டரது அதிகார வரம்பிற்குள் உட்படுத்தப்பட்டது.
1813. சிவகெங்கை ஜமீன்தார் முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா.
1814. கிழக்கிந்திய கும்பேனியாரது வெள்ளி ரூபாய் செலாவணி ஈடுபடுத்தப்பட்டது. சீமை எங்கும் வறட்சி. சேதுபதி மன்னரது பெரியாறு திட்டத்தை நிறைவேற்ற கலெக்டர் பாரிஷ் வற்புறுத்தியது.
வரகணை நோயினால் கால்நடைகள் அழிவு.
இளையான்குடியில் நெசவுப்பட்டறையினர் தொழுகை