பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 309

பள்ளி அமைத்தது.
1816 கிராமப் பெருந்தனக்காரர்கள் சிறிய குற்றங்களுக்கான வழக்குகளை விசாரிக்க கும்பெனி அரசாங்கம் சிறப்பான அதிகாரம் வழங்கியது.
1819. படமாத்தூர் ஒய்யாத்தேவர் மரணம்.
1820 பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட துரைச்சாமி தாயகம் திரும்பியது. மதுரை வண்டியூர் அருகில் மரணம். காளையார் கோவிலில் அடக்கம்.
1821 நாடு கடத்தப்பட்ட சின்ன மருத சேர்வைக்காரரது மகன் துரைச்சாமியும் அன்னியூர் கள்ளர் தலைவர் சடைமாயனும் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டது.
காளையார் கோவில் போரில் மருது சேர்வைக்காரர்கள் தோல்வி. மருது சேர்வைக்காரர்களை கும்பெனியார் கைது செய்து, திருப்பத்தூரில் தூக்கில்போட்டது.
1829. சிவகெங்கை முதல் ஜமீன்தார் படைமாத்துர் கெளரி வல்லப தேவர் சிவகெங்கையில் மரணம்.
1830 படைமாத்தூர் ஒய்யாத்தேவர் மகன் முத்துவடுகநாதத் தேவரை சிவகெங்கை ஜமீன்தாராக கும்பெனியார் அங்கீகரித்தது.
1831. முத்துவடுகநாதர் இறந்ததால் அவரது மகன் போதகுருசாமி தேவர் மூன்றாவது ஜமீன்தாராக பதவி ஏற்பு.
1832. படைமாத்தார் கெளரிவல்லப ஒய்யாத்தேவரது மனைவி பர்வத வர்த்தினி மரணம்.
1837. நீதிமன்றக் கட்டுப்பாட்டில் சிவகெங்கை ஜமீன்தாரி இருத்தி வைக்கப்பட்டது.
1843 வைகையாற்றில் பெருவெள்ளம் பல கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டது.
1844 இரண்டாவது ஜமீன்தாரது சகோதரர் இரண்டாவது கெளரிவல்லபத்தேவர் நான்காவது ஜமீன்தாராக பதவி ஏற்றது.
1848. ஜமீன்தார் கெளரி வல்லபத்தேவர் மரணம். ஜமீன்தாரி கோர்ட்ஆப் வார்டு பொறுப்பில் இருத்தி வைக்கப்பட்டது.
1856 சிவகெங்கையில் ஆங்கிலப்பள்ளி தொடங்கப்பட்டது.
1859 நான்காவது ஜமீன்தார் மகன் போதகுருசாமித்தேவர்