இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 309
பள்ளி அமைத்தது. | ||
1816 | கிராமப் பெருந்தனக்காரர்கள் சிறிய குற்றங்களுக்கான வழக்குகளை விசாரிக்க கும்பெனி அரசாங்கம் சிறப்பான அதிகாரம் வழங்கியது. | |
1819. | படமாத்தூர் ஒய்யாத்தேவர் மரணம். | |
1820 | பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட துரைச்சாமி தாயகம் திரும்பியது. மதுரை வண்டியூர் அருகில் மரணம். காளையார் கோவிலில் அடக்கம். | |
1821 | நாடு கடத்தப்பட்ட சின்ன மருத சேர்வைக்காரரது மகன் துரைச்சாமியும் அன்னியூர் கள்ளர் தலைவர் சடைமாயனும் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டது. | |
காளையார் கோவில் போரில் மருது சேர்வைக்காரர்கள் தோல்வி. மருது சேர்வைக்காரர்களை கும்பெனியார் கைது செய்து, திருப்பத்தூரில் தூக்கில்போட்டது. | ||
1829. | சிவகெங்கை முதல் ஜமீன்தார் படைமாத்துர் கெளரி வல்லப தேவர் சிவகெங்கையில் மரணம். | |
1830 | படைமாத்தூர் ஒய்யாத்தேவர் மகன் முத்துவடுகநாதத் தேவரை சிவகெங்கை ஜமீன்தாராக கும்பெனியார் அங்கீகரித்தது. | |
1831. | முத்துவடுகநாதர் இறந்ததால் அவரது மகன் போதகுருசாமி தேவர் மூன்றாவது ஜமீன்தாராக பதவி ஏற்பு. | |
1832. | படைமாத்தார் கெளரிவல்லப ஒய்யாத்தேவரது மனைவி பர்வத வர்த்தினி மரணம். | |
1837. | நீதிமன்றக் கட்டுப்பாட்டில் சிவகெங்கை ஜமீன்தாரி இருத்தி வைக்கப்பட்டது. | |
1843 | வைகையாற்றில் பெருவெள்ளம் பல கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டது. | |
1844 | இரண்டாவது ஜமீன்தாரது சகோதரர் இரண்டாவது கெளரிவல்லபத்தேவர் நான்காவது ஜமீன்தாராக பதவி ஏற்றது. | |
1848. | ஜமீன்தார் கெளரி வல்லபத்தேவர் மரணம். ஜமீன்தாரி கோர்ட்ஆப் வார்டு பொறுப்பில் இருத்தி வைக்கப்பட்டது. | |
1856 | சிவகெங்கையில் ஆங்கிலப்பள்ளி தொடங்கப்பட்டது. | |
1859 | நான்காவது ஜமீன்தார் மகன் போதகுருசாமித்தேவர் | |