பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

ஐந்தாவது ஜமீன்தாராகப் பதவி ஏற்றது.
1862 வைகையாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு.
1864. முதலாவது ஜமீன்தார் படைமாத்தூர் கெளரி வல்லபத்தேவரது ஒரே மகள் காத்தம நாச்சியார் பிரிவு கவுன்சில் நீதிமன்ற ஆணை மூலமாக ஆறாவது ஜமீன்தாராக பதவி ஏற்றது.
1871 மக்கட் கணிப்பு (சென்சஸ்) முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
1876 தாது வருடப் பஞ்சம்.
1877 சிவகெங்கை ஜமீன்தாரியை கிருஷ்ணசாமி செட்டி என்பவருக்கு ராணி காத்தமநாச்சியார் 1.5.1877-ல் குத்தகைக்கு விட்டது.
1874. திருச்சிராப்பள்ளி மகாவித்வான் மீனாட்சி சுந்தாம்பிள்ளை செட்டி நாட்டில் சுற்றுப்பயணம்.
1877 ராணி காத்தமநாச்சியார் மரணம் 24.5.1877.
1876. கெளரிவல்லபத்தேவரது பெயரில் துரைசிங்கத்தேவர் ஏழாவது ஜமீன்தாராக பதவி ஏற்றது.
1881. இரண்டாவது மக்கட் கணிப்பு நடத்தப் பெற்றது.
1883. ஜமீன்தார் துரைச்சிங்கத் தேவர் மரணம். அவரது மகன் பெரியசாமித்தேவர் என்ற உடையணத்தேவர் எட்டாவது ஜமீன்தார். சிவகெங்கையில் மன்னர் உயர்நிலைப்பள்ளி தொடக்கம்.
1884 இடைக்காட்டுரில் அழகிய தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது. மாவட்டத்தில் தாலுகா போர்டுகள் நிறுவப்பட்டன.
1844 இரண்டாவது ஜமீன்தாரது சகோதரர் இரண்டாவது கெளரிவல்லபத்தேவர் நான்காவது ஜமீன்தாராக பதவி ஏற்றது.
1888. சிவகெங்கை ஜமீன்தாரியை இருபத்து இரண்டு ஆண்டுகால குத்தகைக்கு ஜமீன்தார் கொடுத்தது.
1894 சிவகெங்கை நகரில் அலீஸ்மில்லர் மகளிர் பள்ளி தொடக்கம்.
1895 சிவகெங்கையில் வழக்குரைஞர் சங்கம் நிறுவப்பட்டது.
1897 இராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் சுவாமி