இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 311
விவேகானந்தருக்கு மானாமதுரையில் ஜமீன்தார் பொது வரவேற்பு வழங்கியது. | ||
1898 | ஜமீன்தார் உடையணத்தேவர் மரணம். அவரது சுவீகாரபுத்திரர் கெளரிவல்லபர் என்ற துரைச்சிங்கத்தேவர் ஜமீன்தாராக பதவி ஏற்பு. | |
1902. | மானாமதுரை வழியாக மதுரை - மண்டபம் ரயில்தடம் தொடக்கம். | |
1909 | ஜமீன்தாரது அன்பளிப்பு நிலத்தில் ஸ்விடிஷ் மிசனரியினால் திருப்பத்துர் மருத்துவமனை அமைத்தல். | |
இளையாங்குடியில் ஸ்டார் முஸ்லீம் புட்பால் சங்கம் அமைப்பு. இளையான்குடி சாலை ஊரில் ஹனபி பள்ளிவாசல் அமைப்பு. | ||
1910 | சிவகங்கையை உள்ளடக்கிய இராமநாதபுரம் மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. | |
1911. | கானாடுகாத்தான் அண்ணாமலை செட்டியார் செட்டிநாட்டு அரசராக (ராஜாசர்) பிரிட்டீஷ் அரசாங்கம் அறிவித்தது. | |
சிவகெங்கை நகரில் சார்பு நீதிமன்றம் நிறுவப்பட்டது. | ||
1915 | காரைக்குடியில் வைசிய மித்திரன் இதழ் தொடக்கம். | |
1917. | காரைக்குடி சிவன்கோவில் தெருவில் இந்து மதாபிமான சங்கம் தொடக்கம். | |
1919. | காரைக்குடிக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வருகை. | |
1920 | தேசபக்தர் சுப்பிரமணிய சிவா காரைக்குடி மேலஊரணிக்கரையில் பாரத மாதா ஆசிரமம் நிறுவி தேசிய உணர்வைப் பரப்பியது. "தனவைசியன்" - இதழ் காரைக்குடியில் சொ. முருகப்பா அவர்களால் தொடக்கம் சிவகெங்கையில் ஜமீன்தார் துரைசிங்கராஜா அவர்கள் ஏழை மாணவர்களுக்கு விடுதி ஏற்படுத்தியது. வைகையாற்றில் பெருவெள்ளம். | |
1921 | கிலாபத் இயக்கம். முகமது அலி சகோதரர்கள் மாவட்டத்தில் சுற்றுப்பயணம். | |
1923. | இளையான்குடி பகுதியில் சுப்பிரமணிய சிவா காங்கிரஸ் பிரச்சாரம் இளையான்குடிக்கு மூதறிஞர் ராஜாஜி வருகை. | |