பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 311

விவேகானந்தருக்கு மானாமதுரையில் ஜமீன்தார் பொது வரவேற்பு வழங்கியது.
1898 ஜமீன்தார் உடையணத்தேவர் மரணம். அவரது சுவீகாரபுத்திரர் கெளரிவல்லபர் என்ற துரைச்சிங்கத்தேவர் ஜமீன்தாராக பதவி ஏற்பு.
1902. மானாமதுரை வழியாக மதுரை - மண்டபம் ரயில்தடம் தொடக்கம்.
1909 ஜமீன்தாரது அன்பளிப்பு நிலத்தில் ஸ்விடிஷ் மிசனரியினால் திருப்பத்துர் மருத்துவமனை அமைத்தல்.
இளையாங்குடியில் ஸ்டார் முஸ்லீம் புட்பால் சங்கம் அமைப்பு. இளையான்குடி சாலை ஊரில் ஹனபி பள்ளிவாசல் அமைப்பு.
1910 சிவகங்கையை உள்ளடக்கிய இராமநாதபுரம் மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது.
1911. கானாடுகாத்தான் அண்ணாமலை செட்டியார் செட்டிநாட்டு அரசராக (ராஜாசர்) பிரிட்டீஷ் அரசாங்கம் அறிவித்தது.
சிவகெங்கை நகரில் சார்பு நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1915 காரைக்குடியில் வைசிய மித்திரன் இதழ் தொடக்கம்.
1917. காரைக்குடி சிவன்கோவில் தெருவில் இந்து மதாபிமான சங்கம் தொடக்கம்.
1919. காரைக்குடிக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வருகை.
1920 தேசபக்தர் சுப்பிரமணிய சிவா காரைக்குடி மேலஊரணிக்கரையில் பாரத மாதா ஆசிரமம் நிறுவி தேசிய உணர்வைப் பரப்பியது. "தனவைசியன்" - இதழ் காரைக்குடியில் சொ. முருகப்பா அவர்களால் தொடக்கம் சிவகெங்கையில் ஜமீன்தார் துரைசிங்கராஜா அவர்கள் ஏழை மாணவர்களுக்கு விடுதி ஏற்படுத்தியது. வைகையாற்றில் பெருவெள்ளம்.
1921 கிலாபத் இயக்கம். முகமது அலி சகோதரர்கள் மாவட்டத்தில் சுற்றுப்பயணம்.
1923. இளையான்குடி பகுதியில் சுப்பிரமணிய சிவா காங்கிரஸ் பிரச்சாரம் இளையான்குடிக்கு மூதறிஞர் ராஜாஜி வருகை.