பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 313

 பள்ளி மாணவர் தலைவர் எம். வி. சுந்தரம் பள்ளியில் இருந்து நீக்கம். மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
1934 காந்தியடிகள் பாகனேரிக்கு வருகை. ஆர். வி. சுவாமிநாதன் விருந்தினராக தங்கல் சிவகெங்கையில் கோகலேஹால் முன் கூட்டத்தில் சொற்பொழிவு.
1935 தேவகோட்டையில் காங்கிரஸ் தொண்டர் மாநாடு. இளையான்குடியில் ஆச்சாரியா ரெங்கா தலைமையில் விவசாயிகள் மாநாடு. மானாமதுரையில் வக்கீல் பி. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் முயற்சியில் ஹரிஜன மாணவர் முதன்முறையாக மற்றைய மாணவர்களுடன் சேர்ந்து கல்விகற்கும் வாய்ப்பை பெற்றது.
1937 இருபத்து ஏழு ஆண்டுகள் நடைபெற்ற கோயில் திருப்பணியின் முடிவில் கே. வேலங்குடியில் அஷ்ட பந்தன குடமுழுக்கு விழா.
1939 காரைக்குடியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கம்பன் கழகம் தோற்றுவித்தது. இளையான்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரது முயற்சியில் வட்டார காங்கிரஸ் மாநாடு. தியாகி எஸ். ஏ. ரஹிம் பங்கேற்பு. இரண்டாவது உலகப்பெரும் போர் தொடக்கம்.
அமராவதி புதுாரில் ராய சொக்கலிங்கனாரது விருந்தினராக தங்கமல்.
1941. இளையான்குடியில் பாட்சா ராவுத்தர் முயற்சியில் அம்பர் சர்க்காவில் நூல் நூற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகெங்கையில் போர் நிதி வசூலுக்காக வருகை தந்த சென்னை மாநில கவர்னர் ஆர்தர் ஹோப் பேசுவதற்காக அமைக்கப்பட்ட அலங்கார பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது.
இளையான்குடியில் முஸ்லீம் இளைஞர் ஐக்கிய சங்கம் அமைப்பு.
1942 இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கிய "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் வன்முறையாக வெடித்தது.
காரைக்குடி தேவகோட்டை, நடராஜபுரம், திருவேகம்பத்து, பூலாங்குறிச்சி ஆகிய ஊர்களில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் போலீஸ் சுட்டது.
மக்கள் படுகொலை பொதுச்சொத்துக்கள் சேதம்.