பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

 சிவகெங்கை, மானாமதுரை, திருப்பத்துர் ஆகிய ஊர்களில் கண்டனப் பேரணி.
1943 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை செட்டிநாடு வருகை.
1944 இளையான்குடியருகே ராயல் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது.
1946 மன்னர் சண்முகராஜா சிவகெங்கை ஜமீன்தார் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
திருக்கோஷ்டியூர் செளமியநாராயணப் பெருமாள் ஆலயத்தில் சிவகெங்கை ஜமீன்தார் சண்முகராஜா சுப்பிரமணிய ராஜா, நாட்டார் பெருமக்களுடனும் அரிசன மக்களுடனும் ஆலயப் பிரவேசம்.
மதுரைக்கு வருகை தந்த காந்தியடிகள். சிவகெங்கை மாளிகையில் சிவகெங்கை ஜமீன்தார் விருந்தினராக தங்கியது.
1947. இந்திய நாடு சுதந்திரம் பெற்றதை குறிக்கும். கொண்டாட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. சிவகெங்கை மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரி தொடக்கம் சிவகெங்கை ஜமீன்தார் வழங்கிய நிலத்தில் இளையான்குடியில் முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பெற்றது.
1949 தமிழ்நாடு ஜமீன் ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. சிவகெங்கை ஜமீன்தாரி என்ற அமைப்பு நீக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாகியது.