பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

இராணி அகிலாண்ட ஈஸ்வரியின் அறக்கொடைகள்:

திருக்கோயில்கள்
கி.பி. 1732 சித்து ஊரணி (எமனேஸ்வரம் வட்டம்) இராஜேந்திர சோளிவரர் ஆலயம் இளையான்குடி
தனியார்கள்
கி.பி. 1733 இளமனூர் (எமனேஸ்வரம் வட்டம்) ஊழியமான்யம்
1742 பாப்பான் ஏந்தல் (மங்கலம் வட்டம்) ஊழியமான்யம்
அறுவாணி (மங்கலம் வட்டம்) ஊழியமான்யம்
1743 புலிஅடி (மங்கலம் வட்டம்) அனந்த ஐயர், இனாம்.


இந்த ராணியார், மன்னர் சசிவர்ணத் தேவரது இறப்பிற்கு முன்னரே கி.பி. 1744-ல் இறந்து இருக்கலாம் என்பதையும் இங்கே ஊகிக்க முடிகிறது. மன்னரது நிலக்கொடைகள் பற்றி கிடைத்துள்ள சில செப்பேடுகளின் உண்மை நகல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

1. சிவகங்கைச் செப்பேடு

இந்த மன்னர் வழங்கியுள்ள செப்பேடுகள் பல. ஆனால் நமக்கு கிடைத்துள்ள இந்த மன்னரது நான்கு செப்பேடுகளில் முதலாவது இது. 18.4.1733 தேதியன்று, சிவகங்கை திருக்குளத்தின் கரையில் சாத்தப்ப ஞானியாரது மடத்தில் குருபூஜை, பரதேசி நித்தியபூஜை, நவராத்திரி பூஜை, சிவராத்திரி பூஜை ஆகிய நடத்தி வைப்பதற்கு ஏதுவாக மருதவயல் ஏந்தல் சர்வ மான்யமாக வழங்கப்பட்டதற்கான தானசாசனம் இது. மதுரை நீதிமன்றத்தில் உள்ளது.

  1. ஸ்ரீ சுபமஸ்து சாலிவாகன சகாப்தம் 1655 கலியுக சகாப்தம்
  2. 4834 இதின் மேல் செல்லா நின்ற பிரமாதீச ஸ்ரீ சித்திரை மீஉ
  3. 21ந்தேதி புதன் கிழமையும் பவுர்ணமியும் சுவாதி நட்சித்திரமும் விருச.
  4. பலக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீமன் மகா மன்
  5. டலேசுரன் தளவிபாடன் பாசக்கி தப்புவராய கண்டன்
  6. மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு குடாதான்
  7. பாண்டி மண்டல தாபநாச்சாரியான் சோளமண்டல சண்டப் பிரச
  8. ண்டன் ஈளமண்டலமும் கொண்டு யாழ்ப்பாண பட்டணமும் கெச
  9. வேட்டை கண்டருளிய ராசாதி ராசன் ராச பரமேசுவரன் ராச
  10. மார்த்தாண்டன் ராசாக்கள் தம்பிரான் ரவிகுலசேகரன் தொட்டிய
  11. தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிள்த்தான் துலுக்க தளவிபாட